RSS

4.எனக்கு அந்தக் கெட்டபழக்கம் மட்டும் இல்லை


இந்த இலக்கங்களைப்பற்றி சேதுராமன் ஆராட்சி செய்து வெளியிடும்வரை அதைப்பற்றி ஒருவரும் சிந்திக்காமல் இருந்துவிட்டம். தமிழ்ச் சோதிடர்கள் நமக்கு சாத்திரம்பார்த்து பிறந்த குறிப்புககள் கணிக்கும்போது பூமியை இருந்த இடத்தில் வைத்துக் கணித்து விட்டார்கள். அதனால் சாத்திரங்கள் பிழையானவை என்று பரவலாகப் பேசப்பட்டாலும் திருமணத்திற்கு பெண்ணின் பொய்க் குறிப்பும், ஆணின் பொய்க்குறிப்பும் உண்மையில் பொருந்துதா என்று பார்த்து பொய்யிற்கும் பொய்யிற்கும் பொருத்தம் என்று உண்மையில் கல்யாணம் பண்ணிவைக்கினம். இதுவும் ஒரு முறைக்குச் சரிதான் கணிதத்தில் மைனஸ் ( - ) ஐ மைனஸ் ஆல் பெருக்கிளால் சக என்றுதானே எடுக்கிறம். நான் இதைப்பற்றிக் கதைக்க வரவில்லை. என் நிலைக்கண்ணாடி 3 கொஞ்சம் தமிழ்ப்படம் மாதிரி நீண்டுவிட்டது ஆங்கிலப் படம்மாதிரி எடுத்தால் நல்லது என்று நண்பர்கள் கதைக்கினம். எனக்கும் இந்த 3 க்கும் சரிவராது. என் பிறந்த எண் 3 உடன் ஒத்துவராது போல.

முகநூல் ஆரம்பத்தில் சிறியவயதினர்தான் திறந்தார்கள். அப்போ தாய் தகப்பன் நல்ல ஏச்சுக்கொடுத்து திறக்வேண்டாம், திறந்தால் பிள்ளைகள் கெட்டுவிடும் என்று சொன்னார்கள். பொடி பொட்டையள் ஏதோ ஒளிவு மறைவா திறந்து காலத்தை ஓட்டுதுகள். இப்ப என்னவெண்றால் முகநூல்  திறந்தால் கெட்டுப்போவினம் என்று சொன்ன; தாய் தகப்பனே தங்களுக்கு வேறு வேறாகத்திறந்து பாத்றூம் போகும்போதுகூட கணனி கொண்டுபோகிற அளவுக்கு பிசி ஆகிவிட்டினம். காலை வணக்கம், மாலைவணக்கம் ஒழுங்காகச் சொல்லி பாட்டும் போடுபவர்கள் இருக்கிறார்கள். காலை எழுந்ததும் விரும்பியவர்களின் தரிசனம் இல்லாவிட்டால் ஆபீஸ் கட் அடிப்பவர்களும் இருக்கின்றார்கள். முகநூலில் வந்து வெளிப்படையாக அவர் பதிவுகளில் ஒன்றிற்கு விருப்பம்போட்டு  வரவைத் தெரிவித்து இன்பொக்சுக்குள் மணிக்கணக்காக இருப்பவர்கள் இருக்கிறார்கள். நான் நிமிடக்கணக்கில்தான் இருந்திருக்கின்றேன். உண்மை சொல்வதில் எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத்தாங்கும் சக்தியை நிட்சயம் கடவுள் நமக்குக் கொடுப்பார். கவிஞர் கண்ணதாசனை 1958ம் ஆண்டு ஒரு பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். பேட்டி எடுத்தவர் அரசியலில் மற்றப்பாட்டியைச் சேர்ந்தவர். இதன்மூலம் கண்ணதாசனை மடக்கவேண்டும் என்பதே நிருபரின் விருப்பமாக இருந்தது. கேள்வி பதில் நடந்துகொண்டிருந்தது. திடீரென்று கண்ணதாசனைப்பார்த்து நிருபர் கேட்டார். ''நீங்கள் உண்மை சொல்லுவவதாக அறிந்தேன் நான் ஒரு கேள்வி கேட்பேன் சொல்ல முமுடியுமா'' என்றார். கண்ணதாசன் திரித்துக்கொண்டெ கேளுங்கள் என்றார். நிருபர் கேட்டார் ''உங்கள் கெட்ட பழக்கங்களை ஒவ்வொன்றாக மக்களுக்குச் சொல்ல முடியுமா'' என்று கேட்டார். இந்தக் கேள்வியைக்  கேட்டுவிட்டு குறிப்பெடுக்க ஆயத்தமானார். கண்ணதாசன் சொன்னார் ''என் அப்பாவுக்கு வெற்றிலை போடும் கெட்டபழக்கம் மட்டும் இருந்தது, எனக்கு அந்தக் கெட்டபழக்கம் மட்டும் இல்லை'' என்று பதிலளித்தார். நிருபர் பேட்டியை முடித்து வீடு திரும்பினார். இதை கண்ணதாசன் தன் வனவாசம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நானும் எனக்கென்றொரு பக்கத்தை திறந்தன். அதில் wall (மதில் அல்லது சுவுர்) என்ற ஒன்றில் எல்லோரும் எழுதலாம் என்று எனக்கு கனகாலத்திற்குப் பின்னர்தான் தெரியும். அதனால் பலர் என் அனுமதி இல்லாமலே கண்டதையும் கடியதையும் போட்டார்கள். எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. விளம்பரம் ஒட்டாதே என்று என்மதிலில் ஒரு மூலையில் தமிழில் எழுதிவிட்டன். தமிழ் வாசிக்கத்தெரியாத ரமிழர் பலர் இப்பவும் என் சுவரில் எழுதுகிறார்கள். அதன் பின்னர்தான் தெரிந்தது ஊரில் மதிலில் எழுதியவர்களும் வெளிநாட்டிற்கு வந்துவிட்டார்கள் என்று. நானும் எங்கள் ஊர் மதிலில் இரவில் எழுதியிருக்கிறன். நீங்கள் நினைப்பதுபோல் தப்பாக என்றும் எழுதவில்லை. இலங்கை அரசாஙகம் தமிழருக்கு எதிராகப் போர்க்கொடி துர்க்கிய காலம். தமிழ்மாணவர் பேரவை அமைக்கப்பட்ட காலம். அப்போதான் நான் பக்கத்து வாத்தியர்ரவீட்டு மதிலில் ''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று எழுதினேன். அப்போது ஊர் நாய்கள் சத்தம்போடும்.

நாய் என்றால் ஐரொப்பாவில் பிறக்கவேண்டும் என்பார்கள். ஒரு வெள்ளைக்காரன் நான் சாப்பிடும் அதே இறைச்சி உணவை உணவுவிடுதியில் வாங்கிப் போட்டதை நான் பார்த்திருக்கின்றேன். ஒரு வெள்ளையன் தன் நாயுடன் தெருவில் நடப்பதை ஒரு கம்பீரத்தோற்றமாக நினைக்கின்றான். பக்கத்து வீட்டு 12 வயது நிரம்பிய வெள்ளைக்காரப் பொடியன் எனனைப் பார்த்து போகும்போது வரும்போது எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போவான். அவன் நான் அந்த இடத்தில் குடியேறிய பின்னர்தான் பிறந்தவன். இன்றுகாலை என்னைக் கண்டதும் கிட்ட ஓடிவந்து பெரிதாக வணக்கம் சொன்னான். மிகவும் என்றுமில்லாதவாறு சந்தோஷமாகவும் இருந்தான். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு விடைபெற ஆயத்தமானேன். அவன் என்னைப்பார்த்து ''நீங்கள் இன்று என்னை காலையில் பார்க்கவில்லையா, பார்க்கவில்லையா என்று ஆவலாகவும், ஒருவித கவலையாகவும் கேட்டான். நான் மன்னித்துக்கொள் இன்று என்ன புதினம் ஏன் அப்படி கேட்கிறாய் என்று கேட்டேன். அவன் சொன்னான் ''இன்று எங்கள் அப்பா எங்கள் நாளை ஒரு மணித்தியாலம் வெளியில் கொண்டுபோகத்தந்தவர்'' அதுதான் எனக்கு இன்று சந்தோஷம் என்றான். நீங்கள் பார்க்காததும் எனக்கு கவலை என்றும் சொன்னான். நான் சொன்னேன் இடுத்தமுறை நீ நாய்கொண்டுபோகும்போது எனக்கு சொல்லு என்றேன். அவன் சொன்னான் ''இந்தமுறை கணக்குப் பாடத்திற்கு அதிக புள்ளிகள் எடுத்தபடியால்தான் நாயை வெளியில் கொண்டுபோகத்தந்தவர். அடுத்தமுறை சமூகவியல் பாடத்திற்கு அதிக புள்ளிகள் எடுத்தால்தான்அப்பா நாய் தருவுதாகக் கூறியிருக்கின்றார். அந்தப்பாடம் எனக்குக் கஷ்டமானது என்றும், தெருவால் நாய் கொண்டு செல்லும் கம்பீரத் தொற்றத்தையும் இழந்தவனாகக் கவலைப்பட்டான். நிட்சயமாக நாய் உனக்கு கிடைக்கும் நன்றாகப் படி என்று சொன்னேன். நன்றி கூறி விடைபெற்றான். நம்ப பிள்ளைகளும் இருக்கே, தாய் தகப்பனை அதை வாங்கித்தா, இதை வாங்கித்தா என்று நாயாகப் படுத்துதுகள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: