RSS

நிலைக்கண்ணாடி - 42 - புராணப்புரட்டு


"பெண்ணை - ஆடை கட்டிப் பார்த்தால் கலை; இல்லாமல் பார்த்தால் கவிதை; பிணமாகப் பார்த்தால் தத்துவம்." இது கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கூற்று. அவரே தொடர்ந்து கூறுகையில் "உலக அழகியே மடியில் கிடந்தாலும் இவளைவிட அழகி இல்லையா என்று மனம் அங்கலாய்க்கும். கிடைத்தற்கரிய பொருள் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு குறைந்துவிடும்" என்கிறார். என்னைப் பொறுத்துவரையில் கிடைத்தற்கரிய பொருள் கிடைத்துவிட்டால் அதுவே எனது பிறப்பின்பயன் என்று கருதுவேன்.

கவி என்று ஒரு மதம் இருந்தால் அதற்குக் கண்ணதாசனையே நான் கடவுளாக வைத்திருப்பேன் என்று சொல்லும் அளவிற்கு அவர்மீது எனக்கு பக்தி அதிகம். அவரது ஒரு பாடலைப் பலவருடங்கள் கழித்து இன்று கேட்கும் சந்தர்ப்பம் வந்தது. "கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்; கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்! காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!! .........பத்தினிகள் பெயரைவைத்துப் பரத்தையரை வளர்த்துவிடும் பாரத பூமி; இதை பாருங்கள் சாமி. அவள் பெயரோ அருந்ததி ஐம்பது ரூபாய்; இவள் பெயரோ அகலிகை அறுபதுரூபாய்..... இப்படி அந்தப் பாடல் போகிறது. இந்தப் பாடலுக்குத் திரு MGR அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால் பாரதிதாசன் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக "கோரிக்கை அற்றுக் கிடக்குதையா வேரில் பழுத்த பலா" என்று பெண்களைக் குறிப்பிட்டார். பாரதியார் மட்டும் பெண்களின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்பவற்றை வேருடன் சாய்த்துப் பெண்களுக்கு இருக்கவேண்டிய குணங்கள் அறிவு துணிவு ஞானம் கல்வி என்று புதுமைப் பெண்ணாக ஒவ்வொரு பெண்களையும் விடுதலை பெறவேண்டும் என்று புரட்சியாகச் சிந்தித்தார். சிந்தித்தும் என்ன நடந்தது.
கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் சொல்வதுபோல இங்கிலாந்துப் பெண்ணுக்கும் இந்திய ஆணுக்கும் காமம் அதிகம் என்று சொல்வதையே இந்திய ஆண் சமூகம் செய்துகாட்டி மகிழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. பாரதம் என்றதும் ஆங்லேயர் "காந்தி" சினிமாப் பார்த்துப் பலவற்றைப் புரிந்து கொண்டார்கள்.(இந்தியர்கள் வெட்கித் தலைகுனியவேண்டிய விடையம். காந்தி சினிமாவையும் ஆங்கிலேயர்கள்தான் எடுத்தார்கள்)  மிகுதியைக் "காமசூத்ரா" சினிமாப் பார்த்து விளங்கிக் கொண்டார்ள். பாரதத்தில் பரத்தையர்கள் எப்படி வந்தார்கள். முற்றும் திறந்த முனிவர்களே பாரதக் கதையில் மனைவிமாருடன்தான் வாழ்கின்றார்கள். அரசனின் அந்தப் புரத்தில்  இருந்து தட்டப்படும் பெண்கள் ஐயர் மாருத்குத் தானமாக வளங்கப்பட்டதாம். இவர்கள் கோவில்களை அண்டிய பகுதிகளில் ஐயர் மார்களாலும் கைவிடப்பட்டுத் தேவதாசிகள் என்ற முத்திரையுடன் வாழ்பவர்கள். சங்ககாலத்தில் இசையையும் கலையையும் வளர்த்த பாணர் குடும்பங்கள் மற்றவர்களின் இம்சைக்கும் இயைந்து போனார்கள். இவ்வாறு பெண்கள் வரலாற்றில்; கெடுதவர்கள் தப்பிக் கொண்டார்கள். கெடுக்கப்பட்டவர்கள் மாட்டிக் கொண்டார்கள்.
இது நிரபராதிகள் தண்டிக்கப்படும் ஒரு செயலாகவே காணப்படுகிறது. கீழே இப்படி என்றால் மேலே இருக்கும் பெண்கள் எப்படியோ?

இது பிரம்மாவின் கூற்று.  அகலிகையை மணக்க விரும்புவோர் மும்முறை உலகைச் சுற்றி வரவேண்டும். அதில் வெல்பவருக்கே அவள் மனைவியாக்கப்படுவாள்  என நிபந்தனை விதிக்கப்பட்டது. பல தேவர்களோடு இந்திரனும் கௌதம ரிசியும் கலந்து கொண்டார்கள். விதியின் பயனாய் கௌதமர் வென்று அகலிகைக்கும் அவருக்கும் திருமணம் நடந்தேறியது.போட்டியில் தோற்ற இந்திரனுக்கு அவளை ஒருமுறையேனும் அடையவேணடும் என்ற விருப்பம் மேலிட்டது. ஆசை தணியவில்லை அவனுக்கு.
இந்திரன் ஒருநாள் முனிவரது இடத்திற்குவந்து கோழிச்சேவல் கூவுவதுபோல் கூவ கொதமர் விடிந்துவிட்டது என்று நினைத்து நீராடி மலர் பிடுங்க ஆற்றங்கரை சென்று விட்டார். இந்திரன் சந்தர்ப்பம் பார்த்து அகலிகையை நெருங்குகிறான். அகலிகை பார்த்த மாத்திரத்திலேயே இவன் தன் கணவன் அல்ல எனப் புரிந்து கொண்டாலும் தன் அழகின் மீது இந்திரனுக்கு இருந்த தணிக்கமுடியாத ஆசையால் (இதுதான் உண்மை. மறைக்கப்பட்ட மறுபக்கம். ஆதாரம் இருக்கிறது)  அவனுக்கு(விதியின் பிரகாரம்) உடன்படுகின்றாள். வெளியே சென்றிருந்த கெளதமர் திரும்பி வருவதற்குள் அங்கிருந்து பூனை வடிவில் மறைய முற்பட்ட இந்திரன் முன்னே; நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டு வந்த ஈசனைப் போல் தோன்றிய கெளதமர் இந்திரனுக்கும், அகலிகைக்கும் சாபம் கொடுக்கின்றார். இந்திரன் தன் ஆண்மையை இழக்குமாறும், அகலிகை உண்ண உணவின்றி, காற்றையே உணவாய்க் கொண்டு, புழுதியில் புரண்டு, எவர் கண்களுக்கும் தெரியாததோர் பிறவியாகத் தூசியிலும் தூசியாக ஒரு அணுவாக இங்கேயே நெடுங்காலம் கிடந்த பின்னர், தூயவனும், நன்னடத்தையின் நாயகனும் ஆன ராமன் வருவான். அப்போது உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிச் சென்றார்.
வில்லை ஒடிக்கச் சென்ற ராமன் விசுவாமித்திரருடன் சாபவிமோசனத்திற்காகக் காத்திருக்கும் இடம் சென்றான்.  ராமனும் அந்த ஆசிரமத்தின் உள்ளே பிரவேசித்ததும், அகலிகை தன் பழைய உருவை அடைந்தாள். ராமரை வணங்கி நின்ற அவளை அப்போது தன் மனோவலிமையால் அங்கே வந்து சேர்ந்த கெளதமரும் மன மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றார். ராமனும், லட்சுமணனும் விசுவாமித்திரருடன் மிதிலை நோக்கிச் செல்கின்றனர்.  தவ வலிமையால் அகலிகை சாபவிமோசனம் பெற்றதை விண்ணுலகில் இருந்து அறிந்த கொதமருக்கு தனது வீட்டு முற்றத்தில் இந்திரன் வந்து கோழிபோல் கூவியது மட்டும் தெரியாமல் போய்விட்டது ரிசிகளின் கேவலம்.  இது கதையா புரட்டா. பெண்களை அடிமைப்படுத்தும் அரக்கர் கூட்டமா புரியவில்லை.
அதுசரி கலியாணத்தில் அகலிகைதான் அம்மிக் கல்லாக இருக்கிறாள் என்று மணமகளை வெருட்டி அதில் வைத்து மெட்டி அணிவிக்கிறார்கள். கொதமர் அவள் தூசியிலும் துர்சியாக இருக்கவே சாபம் இட்டார். பார்க்கப்போனால் மாப்பிளை கனக்கக் குனியக்கூடாது என்பதற்காக சிறிது உயரமாகக் காலைவைப்பதற்கே அம்மிக்கல் பாவிக்கப்படுகிறது என்பதுவே உண்மைபோல்இருக்கிறது. வாழ்க மணமக்கள்.நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகையின் கதை கூறுகிறது.
இந்தியா பரவாயில்லை. அமரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு 300 பேர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுகிறார்களாம். உண்மை தானா?

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

kowsy said...

கௌதமர் பெரிய முனி அவர் உண்மை புரியாதது ஒரு பெரிய அவமானம். அகலிகை கல்லாக காலம் கழித்ததும் கால் துகள் பட்டு உயிர்த்தெழுவதும் நம்பக்கூடிய கதையாகவா இருக்கின்றது. அனால் இலக்கியச் சுவைக்கு ஆராய முற்படலாம். முனிவரே அகலிகைக்காக மூன்று முறை உலகத்தைச் சுற்றி வந்திருக்கின்றார். வேகமும் விவேகமும் கொண்டு என்று நினைக்கின்றேன். பலபக்கமாக சிந்தித்து இப்பதிவை தந்திருக்கின்றீர்கள் . நேரம் கிடைக்கும் போது அகலிகை பற்றி நான் எழுதியிருந்த பதிவையும் பார்வை இடுங்கள். வாழ்த்துகள்



http://kowsy2010.blogspot.de/2011/06/blog-post_16.html