RSS

களவியல்.

















காதலெனும் கணவாய்வழி
இதயம் புகுந்த புதிய தேசம் நீ
பல்லவி இழந்த சரணங்களாய் நான்;
இரவைக் குழைத்து அப்பிவைத்த
உன் கூந்தல் வெளிச்ச இருட்டில்
நட்சத்திரங்களைத் தேடுகின்றேன்.
உறவாய் வந்த என் இரத்தத் தாமரையே
உன் வரவுகள் தந்த சிறகால்
உயரங்கள் சிறுமை கொண்டன.
நிலவைத் தொலைத்த வானம்
பூமியில் உன் முகம் கண்டு மகிழ்ந்தது.
பசலை பூத்த உன் பரிச மேனி
விதைத்த வளையல்கள்  வழிபார்த்து
கருக்கலுக்குள் வந்திடுவேன்
கண்மணியே காத்திரடி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 Comments:

ஆத்மா said...

நல்ல ஒரு கவிதை பாராட்டுக்கள்//தொடருங்கள்