RSS

புருசவண்டு


வண்டைத் தேடிய
புது மலர் நான்;
மொட்டவிழ்ந்தவுடன்
கட்டழகைப் பார்த்தவனே
விரல் கொண்டு கதை எழுதி
என் மேனி சுட்டவனே
இதழ்மீது படங்கீறி
உயிருக்குச் சாணை பிடித்தாயே
வெற்றுக் குடத்துள்ளும்
பால் தேடும் பசி உனக்கு
உறிஞ்சிவிட்ட தேனெல்லாம்
ஒரு நெடியில் தீர்த்ததுபோல்
புலருமுன்னே சென்றாயோ
புது மலரை நாடி.
வண்டே நீ வாழ்ந்துவிடு
போதை தலைக்கேறி
நாளெல்லாம் போதாகி
மாலை மடிகின்றேன்.
நீ கூதி மனை சென்று
குளித்துவிட்டு வந்தாலும்
நாளையும் மலந்த்திடுவேன்
என் புருச வண்டே..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: