RSS

தலைவன் ஆற்றாமை.


காத்திருந்த கண்ணுக்குள்
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம்  பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: