RSS

இதயம் பேசுகிறது


இரவின் முற்றுப் புள்ளிக்குள்
கசங்கிக் கிடந்தது வானம்.
ஆதவன் வருகைக்கு முன்
நிலவு மங்கை நித்திரையானாள்.
அன்னத்தின்  முகத்தைக்
கண்வழித்துப் பார்த்திருந்தவன்;
சீனத்து மந்திரம் போல் அவள்
சிணிங்கி எழும் அழகு கண்டு;
ஆரண்ய காண்டத்து
அயோத்திப் பஞ்சணைமேல்;
வதனத்து வார்த்தைகளை
உறிஞ்சிவிட்ட களிப்பில்
இருவருமே களைத்து விட்டார்.

அவனது இதயத்தின் மொழி
அவளது நாடிக்குள்
அங்கங்களில் உயிர் ஊட்டி
வேகவைத்த தண்ணீரில்
நோகவைத்த இடம் எல்லாம்
நெருடிக் குளிப்பாட்டி
பொட்டிட்டுப் பொலிவு காட்டி
தொட்டில் குழந்தைபோல
சுமந்திருப்பேன் என்றாங்கு

இதயங்கள் ஓயவில்லை
ஓடுகின்ற நாடிக்குள்
தேடுகின்ற இடம் எல்லாம்
அவள் நாமம் சிந்திக் கிடக்கிற
சேதிதனை யாரறிவார்.
என்னவள் பெயர் சொல்லி
இன்னும் துடிக்கிறது.
என் இதயம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: