RSS

இதயத்திருடி. (க)விதை !

 
முல்லைப்பூ வெடிக்கின்ற
தேகத்தின் மணங்கமழும்
ஆம்பல்பூ முகத்தவளே;
அடுக்கிவைத்த பவளப்
பல்வரிசைப் பைங்கிளியே;
அத்திப்பூ இடைக்காறி;
ஆவரசம் பூ மேனி;
முத்தமிழில் நான் படித்த
மூன்றாம்பால் செந்தமிழே!

பொன் உருக்கும் உலை அருகில்
துடிக்கின்ற எறும்பாகக்
கள்ளிருக்கும் காந்தழ் மீது
கனநாளாய் ஆசை வைச்சன்.
வெட்டுக் கிளிபோன்ற
வேலெறியும் கண்களுக்குள்
கொடுத்தும் பறித்தும்
கணக்கின்றி இதழ்சிந்தும்
விசம் எனக்குத் தந்தவளே;
மாதுளைக் கனிதன்னில்

முகத்தினைப் புதைத்திங்கு
தலைகீழாய்ப் புவியெல்லாம்
சுத்தவைத்துச் சாகவைத்தாய்.
எழில் தோகை அருகிருந்து
சுவையரசி இயல் படித்தேன்.
இதயத்துள் அவளைப்போல்
சிற்பங்கள் பல செய்து
பணிமொழியாள் நாமத்தில்
பூசையிலே பூப்போட்டேன்.
பசித்தவளைப் படமாக்கி
அழ்மனத்தில் நான் ஒழித்தேன்.
உலகத்தை ஈடாக்கி
உன்னவளை அழி என்றால்
உலகையே அழித்துவிட்டு
என்னவளைக் களித்திருப்பேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: