RSS

நரேந்திரன்!

அனைவருக்கும் வணக்கம். இவை மிகவும் கடினமானதும் அதே நேரம் இலகுவாக்கப்பட்டதுமான ஆய்வுக்குரிய கட்டுரைகள். வாசித்துப் பயன்பெறுவதோடு அன்றி இயன்றவரை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தயவாகக் கேட்டுக் கொள்கிறேன் .

கொழும்புப் பல்கலைக் கழகத்தில் புவியியல் விரிவுரையாளர் ஒரு விரிவுரை நடாத்தினார் .அதன் தலைப்பு "கரைகளைத் தாக்கும் பேரலைகள்"  அப்போது சுனாமி என்ற சொல்லைத்தான் இவ்வாறு அழைப்பது என்பதைப் பட்டப்படிப்பு மாணவர்கள் கூட அறியாமல் இருந்தார்கள். அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை மில்லியன் வருடங்களாகத் தாக்கிக் கொண்டிருப்பதாகவும் அலாஸ்காவின் கடற்கரை 200 அடிக்கு மேற்பட்ட உயரமான பாறைகளைக் கொண்டிருப்பதால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு இதுவரை இல்லை என்றும் குறிப்பிட்டார். இது முக்கியமானது அல்ல எல்லோரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டேன் என்று சொல்லி விரிவுரையை முடித்துக் கொண்டார். ஆனால் அந்த வருடம் பரீட்சைக்கு அந்தக் கேள்விவந்து மாணவவர்களைச் சுனாமியைவிடக் கூடுதலாக உலுப்பி எடுத்துவிட்டது. அதே பல்கலைக் கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும் அதன் வளாகத்தில் "கோள் மண்டபம்" என்று ஒன்று இருக்கின்றது. உள்ளே சென்றால் வேற்றுக் கிரகத்தில் நிற்பதுபோல் இருக்கும் .எல்லா மண்டலங்களையும் நட்சத்திரத் தொகுதிகளையும் பக்கத்தில் நின்று பார்ப்பதுபோல் இருக்கும் . இதைக் கனடிய விண்வெளி ஆராச்சி சிறுவனம் கட்டிக்கொடுத்தது.

இன்றைய நிலைப்பாட எனக்கு அன்று இருந்திருந்தால் ஆன்மீகவாதிகள் குறிப்பிடும் ஹோமமண்டலம் அதனுள் தெரிகின்றதா என்று உற்றுநோக்கியிருப்பேன் .ஜீவாத்மாவாகப் பூமியில் வாழும் நான், அந்தப் பரமாத்மாவின் காலடிகளை அதனுள் தரிசித்திருக்கலாம் . ஆனால் ராமகிருஸ்ணர் என்ற ஒரு ஆன்மீக விஞ்ஞானி அதனுள்ளே (ஹோமமண்டலம்) சென்று வந்த கதைதான் இங்கு விபரணமாகிறது. 18.02.1836 அன்றுதான் பூமியின் புனிதத்திற்காகப் புதிய மகவு ஒன்று அவதரித்தநாள். கதாதர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு பாடசாலை நாட்கள் மிகவும் சிறப்பாக இருக்கவில்லை. கணிதபாடத்தில் மிகவும் குறைந்த புள்ளிகளை ஈட்டிவந்தார் .பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாததால் பள்ளிப்படிப்பை இடை நிறுத்தி கல்கத்தாவில் உள்ள ஒரு காளி ஆலயத்தில் குருக்களாகப் பணியாற்றி காளி அனுக்கிரகம் பெற்றார். காளி ஆட்கொண்டதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாகின. இதனைக்கண்ட அவரது தாயார் மகனுக்குப் பயித்தியம் பிடித்துவிட்டது. திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்று பெண்பார்த்தார். இதனை அறிந்த அவர் பக்கத்து ஊரில் உள்ள சாரதாமணி என்ற 5 வயதுப் பெண்ணையே தான் மணக்கவேண்டும் என்று அடம்பிடித்து மணந்து மனைவியைக் காளியாக அலங்கரித்துப் பூசைகள் செய்து மகிழ்ந்தார். திருமணமாகியும் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரு மகான் தான் ராமகிருஸ்ணர். கங்கைக் கரையில் ஆசிரமம் அமைத்து அவர் வாழ்ந்து கழித்த நாட்களே அதிகம். அத்வைத வேதாந்தங்களைக் கற்று அதனூடாக இயேசு, அல்லா உட்பட அனைத்து அவதாரங்களையும்  தான் கண்டதாக அவரே கூறியும் இருக்கிறார்
இவருக்கு இருந்த ஒரே ஒரு குறை தனக்குப்பின் உலகத்தில் ஆன்மீகத்தை வாழவைக்க ஒரு சீடன் தேவை என்பதாகவே இருந்தது . அத்வைத வேதாந்தம் கற்று அதன்பயனாக 6 மாதங்கள் "நிர்விகல்ப" சமாதிநிலையில் ராமகிருஸ்ணர் இருந்தார் .இந்தநேரம்தான் தனக்கொரு வாரிசு தேவை என்பதற்காக "ஏழு மண்டலங்களில் ஒன்றான "ஹோமமண்டலம்" சென்றிருந்தார். பல தவவலிமை பெற்ற முனிவர்கள் இவரைப்பார்த்து ஆசை அற்ற உலகத்திற்கு ஆசையுடன் ஒருவன் வருகிறான் என்று நக்கல் அடித்தார்கள் .ஏழனத்தைப் பொருட்படுத்தாத இவர் தனக்கொரு வாரிசு தேவை என்று இறைவனை வேண்டினார் .கையில் ஒரு குழந்தைகிடைத்தது. பின்னர் மாயமாக மறைக்கப்பட்டு பூமியில் 17 ஆண்டுகளுக்குப்பிறகு உன்னைத்தேடி வருவான், அவனது தாயின் பெயர் புவனேசுவரி என்று கூறப்பட்டது. ஆறு மாதகாலத் தவத்தால் அடைந்த இன்பநிலையை எண்ணிப் பூமிக்குவந்து சமாதி நிலை கலைந்து சாதாரண துறவியாக மெய்ஞானியாக வாழ்ந்தார் .

12.01.1863 விசுவநாத் புவனேசுவரி தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. அமைதியான ஒரு தேவவிதை கல்கத்தாவில் முளைக்கத் தொடங்கியது. கல்வி கேள்விகளிலும் இசையிலும் சிறந்து விளங்கிய இவர் மனதில் கடவுள் கொள்கைகள் பற்றிய கருத்துக்கள் முரண்பாடாகவே தோற்றம் அளித்தன. அதனால் துறவு வேடம் பூண்டவர்களைக் கள்ளச்சாமி என்றும் வாதிட்டுவந்தார். ராமகிருஸ்ணரிடம் சென்றும் தனது நண்பர்களுடன் எதிர்வாதம் செய்வார். 1881ம் ஆண்டு ஆனிமாதம் இவரை யார் என்று அறிந்திருந்த ராமகிருஸ்ணர் "உனது பிரச்சனை என்ன" என்று கேட்டார். கடவுளைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் எனது ஆசிரமத்துக்குவா என்று அந்த இளைஞனை அழைத்துச்சென்றார். அவனை இருக்கவைத்து தலையில் அமத்தி இளைஞன் குளறக்குளற ஒரு சக்தியை ஊட்டினார். இளைஞன் களைத்து மயக்கமாகிவிட்டான். எழுந்ததும் ராமகிருஸ்ணரை ஏசிவிட்டுச் செல்ல முற்படும்போது இரண்டு புத்தகங்களைக் கொடுத்து வீட்டில் சென்று படி என்று வழி அனுப்பிவைத்தார் .புத்தகத்தை அலட்சியமாக வாங்கிய இளைஞன் வீடு சென்றதும் புத்தகத்தை விரித்துப் பார்த்தான் .அதிலுள்ள சுலோகங்கள் அனைத்தும் மறைந்து பார்க்கின்ற இடம் எல்லாம் ராமகிஸ்ருணரின் உருவப்படமாகக் காட்சி அளித்தது. அன்று இரவோடு இரவாக நரேந்திரன்(நரேந்திரநாத்) என்ற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ராமகிஸ்ணரிடம் ஓடிவந்து தன்னைச் சீடனாக்கிப் பின்னைய நாளில் விவேகானந்தர் என்ற பெயரைத் தனக்கு மகுடமாகச் சூட்டிக் கொண்டார் .

உலகப் புகழ்பெற்ற பல சமயச் சொற்பொழிவுகளை நடத்திய இவர் 1892  கன்னியாகுமரிக் கடல் மேட்டில் 3 நாட்கள் தங்கியிருந்து எதிர்கால இந்தியாவுக்காகப் பிரார்த்தனை செயதார் .இது இவரைப்பற்றிய சிறுகுறிப்பே தவிர முழுமைப்படுத்தப்பட்ட கட்டுரை அல்ல. கண்ணதாசன் கூறியதுபோல "இறந்தபின்னரும் மக்கள் இறந்த ஒருவரை இளமையாகப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இளமையில் இறக்கிறார்கள் என்பதுபோல இந்த ஆன்மீக விளக்கும் தனது 39வது வயதில் தன்னை அணைத்துக்கொண்டது. இவர் இறக்கும்போது தனது பிரசங்கம் 1500 ஆண்டுகள் இந்த உலகத்தில் நிலலத்திருக்கும் அதன்பின்னர் ஒருவர் தோன்றுவார் எனக்கூறி விடைபெற்றார். இறப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது இறப்பின் திகதியைக் குறிப்பிட்ட ஒரு மகானாகவும் இவர் காணப்படுகின்றார். இவரது குரு 4 நாட்கள் முன்னதாகவேதான் தனது சமாதிநிலைபற்றிக் குறிப்பிட்டிருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.
என்னை உயர்ந்தவனாக மாற்றியது என்னுள் இருந்த கெட்ட பழக்கங்கள்தான் (விவேகானந்தர்)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: