RSS

காளமேகம்!


வரதன் என்ற இயற்பெயர் கொண்டு கும்பகோணத்தில் பிறந்தவர்தான் காளமேகப் புலவர். இவர் வாழ்ந்த காலப்பகுதி தமிழ் இலக்கிய வரட்சிக் காலமாகிய நாயக்கர் காலமாகும்.புலவர்களை ஆதரிக்காத அரசர்கள் வாழ்ந்த காலமாதலால் இவர் பாடல்கள் பல, வசை பாடுவனவாக இருந்தன. வைணவ குலத்தைச் சேர்ந்தவராக இருந்த இவர் திருவானைக்கா கோவிலில் இறை தொண்டுகள் செய்து வரும்போது அங்கு நாட்டியம் ஆடும் தேவமங்கையைக் கண்டு காதல் மணம் புரிந்தவர். திருமணத்தின் பின்னர் வைணவசமயத்தை விடுத்துச் சைவசமயத்தில் சேர்ந்து கொண்டார். மனைவியின் பெயர் மோகனாங்கி. நாட்டியம் ஆடச் சென்ற மனைவிக்காகக் கோவிலில் காத்திருந்தவர் அசதியில் தூங்கிவிட்டார் . அதே மண்டபத்தில் பாணர் ஒருவர் இரவு பகலாகச் சரசுவதியின் கடாட்சத்தை வேண்டித் தவம் செய்து வந்தார் .
.
தவம் செய்த பாணருக்குச் சரஸ்வதி அருள் பாலிக்க வாயினுள் தாம்பூலத்தை உமிழ்ந்துகொண்டு சிறுபிள்ளை வேடம் பூண்டு வந்தார். சரஸ்வதியைச் சிறுபிள்ளையாகக் கண்ட பாணர் யாரோ தனது தவத்தைக் குலைக்க வந்திருக்கிறார்கள் என்று ஏசித் துரத்திவிட்டார். இந்த அமழியில் நித்திரை குழம்பிய காளமேகப் புலவர் வாயைத் திறந்தபடி சுவரில் சாய்ந்து கொண்டு இருந்தார் .அந்தவழியால் வந்த சரசுவதி காளமேகப் புலவரின் வாயினுள் தாம்பூலத்தை உமிழ்ந்து அருள் பாலித்துவிட்டுச் சென்றார் அன்றிலிருந்து காளமேகப் புலவருக்கு கவிபாடும் வல்லமை வந்தது. புலவர்களில் யமகண்டம் பாடியவர் காளமேகப் புலவராவார்.
.
இவர் சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் .
.
தேங்காயையும் நாயையும் ஒப்பிட்ட ஒரு பாடல்.
.
ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாளும் குலை தனக்கு நாணாது....
:
பாம்பையும் வாழைப்பழத்தையும் ஒப்பிட்டு ஒரு பாடல்
.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது -
விஞ்சுமலர்த் தேம்பாயுஞ் சோலைத்
திருமலைராயன் வரையில் பாம்பாகும் வாழைப்பழம்
.
தண்ணீரை மழை என்றும், நீர் என்றும், மோர் ன்றும் வர்ணித்துள்ள பாடல் .
.
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீனிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”
.
இவரால் பாடப்பட்ட நூல்கள்
.
 திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகியனவையாகும்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS