RSS

கடவுள் தீர்ப்பு - 21.12.2012 (கங்கைமகன்)




ஒரு கிராமத்தில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் இருந்தால் அந்த நாட்டை நான் காப்பாற்றுவேன்(வேதாகமம்).கடவுள் அமைத்துவைத்த மேடையில் அவனது பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஓர் அற்புத ஆன்மாவே மனிதன். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே என்றார் திருநாவுக்கரசர். உன்வீட்டு முற்றத்தில் இருக்கும் பாதச்சுவட்டின்மீது கால்வைத்து நடந்துவா. என்பின்னால் நீ வருவதை அறிந்து கொள்வாய் என்கிறது வேதாகமம். .திருக்குர்ஆனில் நான் ஒளியாக இருக்கும்போது உன்னை இருளில்  தள்ளமாட்டென் என்று ஒரு வசனம் இருக்கின்றது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் இதுவே உலக நியதி என்று கீதையில் கூறப்படுகின்றது. கடவுள் கொள்கை என்பது மனிதன் ஆக்கி வைத்தானே தவிர கடவுள் தன்னை மனிதன் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஆக்கி வைக்கவில்லை..  கடவுள் மனிதனைப் படைத்தார் என்பதனை எல்லா மதங்களும் ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதன் கடவுளைப் படைத்து  வித்தைகள் காட்டுவதே இறைவனுக்குச் சிரிப்பை உண்டுண்ணுகின்றது.

விடைகாண முடியாத புராணக்கதைகளை மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கியது மெய்ஞானம். அந்த மெய்ஞானத்தைக் குடைந்து அதில்வரும் சூட்டில் விஞ்ஞானம் தற்காலத்தில் குளிர்காய்கிறது. விஞ்ஞானம் என்பது மக்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி, என்பதைவிட; உலகமக்களைப் பயங்காட்டும் ஒரு சாத்தானாகவே கடந்த காலங்களில் செயற்பட்டு வருகின்றது. மெய்ஞானத்தை விளங்கிக்கொள்ளச் சமயநூல்களைக் கையில் தூக்கியவர்களை விட அதற்குப் பயந்து சமயநூல்களைக் கையில் தூக்கியவர்களே அமரிக்காவில் நிறைந்து வாழ்கின்றார்கள். உலகம் தொடங்கிய காலம் தொட்டு இந்த உலகத்தில் மதச் சண்டைகளும், ஆக்கிரமிப்புச் சண்டைகளும் இடம்பெறாவிட்டால் தற்போது இருக்கும் மக்கள் தொகையின் இரட்டிப்புத் தொகையினர் இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பர். எந்தப் பொருளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது மனிதனுக்குத் தெரியவில்லை. இதனால்தான் மனிதன் தன்னைக் கடவுளிடம் பாதுபாப்புக் கோரும் நிலமைக்குத் தள்ளப்பட்டான்.

சுமேரியர் குறிப்புக்களையும், மாயன் கலண்டர்களையும், நகைப்புக்குள்ளாக்கிய விஞ்ஞானம் நாசா வடியில் வடிவேலுவின் காமடிக்கு நிகராக வித்தைகாட்டித் தன் வாயைத் தானே இன்று அடைத்துக் கொண்டதோ என்று மக்கள் நினைத்துவிடாதபடி தன் எண்ணத்தில் வெற்றியடைந்துள்ளது.  உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும்  கடவுள் நியதி உண்டு. அதுபோல் இந்த உலகத்திற்கும் ஒரு நியதி உண்டு. கடவுள்  மனிதனை வாழ வைப்பதற்காகவே அவதாரம் எடுத்திருக்கின்றார் என்பதுவே இங்கு உண்மை ஆகின்றது. கடவுள் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட ஒரு சக்தியை நம்பித்தான் ஆகவேண்டும் என்பதுவும் கடவுளின் தீர்ப்புத்தான். இறைவன் தன்னை மறைத்து வைத்திருப்பதுபோல் மனிதனுக்கு அவனது இறப்பின் ரகசியத்தையும் மறைத்தே வைத்திருக்கிறார். ஏன் என்று கேட்டால்  சிலருக்கு என்று சில கடமைகள் உண்டு. கடவுளுக்கு என்றிருக்கும் கடமைகளில் நாம் ஏன் தலையைப்போடுவான். அவரவர் கடமைகளை அவரவர் பார்த்துக் கொள்வதும் கடவுளின் தீர்ப்புத்தான்.

கிழ் வரும் இந்த வரிகள் 30 நவம்பர் 2012 அன்று அழிவின் நுனியில் உலகம் என்ற எனது கதையில் வந்த வரிகள். (எது எப்படி இருப்பினும் நான் "கடவுள் தீர்ப்பு"  என்று 22.12.2012 இல் எழுதும் கதையை நீங்கள் 23.12.2012 இல் வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்)

எல்லோரும் நலம்வாழ  நாம் பாடுவோம். நாம் வாழ அவன் பாடுவான். நன்றி)
அன்புடன் கங்கைமகன்.

இன்று மலேசியாவில் நான். 21.12.2012.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: