RSS

நிலவுக்காதலி


உப்பென்று ஒதுங்கிய கரையை
முத்தமிட்டன அலைகள்,
வான் பெண்ணை மறைத்து
அழுது கொண்டது மழை.
ஓங்கி அடித்த வளியால்
வழி மாறிப்பறந்த முகில்கள்.
இருளைப் போர்த்தியது பூமி,
நட்சத்திரப் பொத்தல் கண்டு
வெட்கித்  தலைகுனிந்து
ஒருநாள் ஒழித்தவளாய்
வானத்தில் தவழ்ந்து
மெள்ளென அடிவைத்து
விண்ணகத்து வளர்பிறையாய்த்
தலைகாட்டிப் பௌர்ணமியில்
முழுதாய் இணைந்தாள்
தேன் நிலவுநாடிய
என் கனவுக்காதலி!

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: