RSS

பனித்தாரகை


தேங்காய்ப் பூக்களால்
என் தேசம்.
பட்ட மரங்களில்
பருத்தி வெடிப்பாய்ச்
சிதறிய பனிப்பூக்கள்
வெப்ப நாட்டின்
சிற்பம் ஒன்று
வேடிக்கை பார்த்து
வீணை அதிர்வாய்ச்
சாணைபிடித்துத்
துருத்தியாகித்
திருப்தியானாள்.
அள்ளித் தின்னும்
ஆசை எனக்கு!
கிள்ளிப்பார்க்காத
குமரி அவள்.
வீட்டுக்குள் நுழைந்து
துள்ளித் திரிந்தவள்
துவண்டு விழுந்து
மெல்லத் தழுவும்
அணங்கைப் போல
மேனி தொட்டுத்
தீனி கேட்டாள்.
பனியை விரட்டும்
பாவனை தெரிந்தவன்
மையலாய் வந்த
அழகுத் தாரகையை;
எப்படி அணைத்திடுவேன்?
அந்தப்  பனிக்குளிர்ப்
பல்லவியை!....
சரணங்களே எனக்குச்
சங்கீதம்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: