RSS

அம்புலிமாமா



அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது தமிழர் கலாச்சாரத்திற்  பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள் என்று கூறுகின்றார்கள். ஆனால் பாரதியார் பெண்களுக்கு அன்பு, அறிவு, பண்பு, கௌரவம் போன்ற நான்குமே அணிகலன் என்கிறார்.  பயிர்ப்பு என்பது கணவன், சசோதரர்கள் அல்லது தகப்பன் தவிர்ந்த ஏனைய ஆண்களின் அங்கம் ஒருவரில் முட்டும்போது அந்தப் பெண் அடையும் ஒரு வெருட்சி நிலையாகும்.  இதனால்தான் பிற ஆடவர்களைத் தன் குழந்தைக்கு அறிமுகம்  செய்யும்போது மாமா என்று கூறித் தன்னை அந்த ஆடவனுக்குச் சகோதரி ஆக்கிக் கொள்கின்றாள் ஒரு தமிழ்ப்பெண்.
.
அம்புலிக்குச் சந்திரன் என்ற பெயர் உண்டு. அதனால்தான் தன் குழந்தைக்கு அம்புலியைக் காட்டும்போது அம்புலி மாமா என்று தன் குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கின்றாள்.
.
இசையமைப்பாளர் திரு M.S.V கண்ணதாசனது ஒரு பாடலுக்கு இசை அமைத்தார். கண்ணதாசனும் கூட இருந்தார். இசையமைத்து முடிந்ததும் கண்ணதாசனைப் பார்த்து M.S.V  "சந்திரன் ஆண்பாலா பெண்பாலா என்று கண்ணதாசனைப் பார்த்துக் கேட்டார். கண்ணதாசன் அவர்கள் அதற்குப் பெண்பால் என்று பதிலளித்தார். உடனே M.S.V இப்போ ஏன் "பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன், அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள் என்று இயற்றினாய் என்று கண்ணதாசனைப் பார்த்துக் கேட்டார் . அதற்குக் கண்ணதாசன் " இந்தப் பாடலில் கதாநாயகனுக்குப் பெயர் சந்திரன்; அதனால்தான் அப்படி எழுதினேனே தவிர அந்தப் பொண்ணை(அம்புலி) வம்பிற்கு இழுக்கவில்லை என்று பதிலளித்துவிட்டு விவநாதனைப் பார்த்துச் சிரித்தார். விவநாதன் இராவணன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே, இந்த..............என்று பாடிச் சிரிப்புடன் நிறுததினார்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: