RSS

புலன்விசாரணை - வாசித்தவர் யாசித்தது


.

வணக்கம். எனது முகநூல் பக்கத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நண்பர்களில் ஒருவர் சகோதரி திருமதி சுபி நரேந்திரன் அவர்கள். நான் கவிதை எழுதத் தொடங்கும் போதே தனக்கு ஒரு நூல் தரவேண்டும் என்பதை அன்பாகச்  சொல்லி வைத்து என்னைப் பெருமைப் படுத்தி ஊக்கமும்  கொடுத்தவர். அதுபோல் எனது நூலின் வெளியீடு முடிந்து முதலாவதாகவும் முழுமையாகவும் வாசித்தவர்களில் அவரும் ஒருவர். அவர் எனது நூலுக்கு எழுதியிருக்கும் விமர்சனத்தை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அவரது கணவருக்கும் எனது நன்றிகள்.
'புலன் விசாரணை' நூலை உங்கள் கை ஒப்பத்தொடு எனக்குக் கிடைக்கச் செய்தமைக்கு முதற் கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் 'ஆத்மலயம்' நூலை வாசித்துவிட்டு புலன் விசாரணைக் கவிதைகளைப் படிக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். வாழ்வின் இரு முக்கிய பரிமாணங்களை கையாண்டவிதம் பிரமாதம். Hats off for you.
.
'புலன் விசாரணை' நூலில் உள்ள பல கவிதைகள் முக நூலில், உங்கள் சொல் விளக்கத்தோடு முன்பே நான் படித்தவைதான். ஆனால் நூலாகப் பார்க்கும் போது வித வித நறுமண மலர் கொத்தைக் கையில் எடுத்தது போல் இருக்கிறது.
அத்தனை கவிதைகளும் பிரமாதம். புதுப் புது உவமைகளோடும், வர்ணனைகளோடும் மனசை லேசாக்கிப் பறக்கச் செய்கின்றன. சங்கத்தமிழை இலகு தமிழில் குழைத்து என் போன்றவர்களுக்குப் புரியும் விதத்தில் கவிதை வரிகள் அமைந்திருப்பது சிறப்பு. இத்தனை கவிதைகளிலும் என்னைக் கொஞ்சம் கூடவாகக் கவர்ந்த கவிதை 'நீயே நீயே' என்ற கடைசிக் கவிதயே. ஆழமான உணர்வோடு யாவும் நீயே என்று சரணடையும் அழகான கவிதை.
ரசனையோடு தேர்ந்தெடுக்கப்பட்ட, கவிதைகளுக்கான வண்ண ஓவியங்கள் கவிதை வரிகள் சொல்லாததையும் சேர்த்துச் சொல்கின்றன. மொத்தத்தில் 'புலன் விசாரணை' புலன்களுக்கெல்லாம் அறுசுவை விருந்து. உங்களைக் கவிஞராக்கி எமக்கு இந்தப் படைப்பைத் தர உதவிய கவிக் குயிலுக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்.
உங்கள் தேடல்களும், தமிழ் சேவைகளும் மேலும் மேலும் வளர எனது ஆசிகளும் வாழ்த்துகளும் ஸ்ரீ.
.
அவர் விரும்பிப் படித்த நீயே நீயே என்ற கவிதையையும் இங்கு பதிவு செய்கிறேன்.
மழையான கோடை நீயே
சிலையான கோவில் நீயே
பொய்பேசும் கண்ணாள் நீயே
மெய்பேசும் தெய்வம் நீயே
துள்ளிய சங்குகள் நீயே
தடைபோடும் நாணம் நீயே
தேரினில் கலசம் நீயே
மொட்டவிழ்ந்த தாமரை நீயே
கன்னம் கொண்ட கனிகள் நீயே
கிண்ணம் தந்த மதுவும் நீயே
வசந்தத்தின் கோலம் நீயே
குமரி கொண்ட மடமும் நீயே
ஆடை பூண்ட தேவதை நீயே
ஆசை வைத்த பூமரம் நீயே
மாலைபூத்த மல்லிகை நீயே
மின்னல் கண்ட வண்ணம் நீயே
என்னைச் சுற்றிய இன்பம் நீயே
தரிசனம் தந்த முகங்கள் நீயே
சரசம் ஆடிய சுகங்கள் நீயே
உறவுகள் தந்த உயிரும் நீயே
Like ·  ·  · Share

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: