RSS

என்றும் இனியவராய்....நண்பர் கிருஷ்ணன் பாலா அவர்கள்.



கோவையில் எனது "புலன்விசாரணை" கவிதை நூல் வெளியீட்டை அடுத்துத் திருநெல்வேலிக்குச் செல்லும் வழியில் நண்பர் திரு கிருஷ்ணன் பாலா அவர்களை மதுரையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அன்று விநாயகர் சதுர்த்திக்காக இராஜபாளையம் செல்லும் பணியில் இருந்த அவர் ஆர்வமிகுதியில் தெருமுனைக்கேவந்து எங்களுக்காகக் காத்திருந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. அவரது சந்திப்பை எனது பயணத்தின் மறக்கமுடியாத நிகழ்வாகவே நான் கருதுகின்றேன்.

எனது புலன்விசாரணையில் வெளிவந்த 28 கவிதைகளுக்கும் அன்பின் நிமித்தம் தனது பார்வையில் பதவுரைகளை எழுதித்தந்தவர். எதிர்பாராத விதமாக அவரது பதவுரைகள் எனது நூலில் இடம்பெறவிலை. அதனால் அவரது பதவுரைகளில்  ஒன்றை எனது கவிதையோடு இணைத்து இங்கு பதிவு செய்வதில் நான் பெருமை அடைகிறேன்.தொடர்ந்தும் அவரது பதவுரைகளை எனது பதிவில் வாசித்து மகிழலாம் .நன்றி நண்பர்களே.
  கவிதைத் தலைப்பு - பாலைக்குமரி.

.
மழை இழந்த நில விதவைகள்,
தழை முழையாத் தரிசுத்ததரை,
வேல்கொண்ட விழிமான்கள்
சூல் கொண்ட கானல் நீரை
ஓடிக் கலைத்த மாலை.
விசும்பு வியர்க்கும் வெய்யில்.
குறிஞ்சி ஒடு முல்லை
திரிந்து விட்ட பாலையில்
அரி மடப் பியையொடு
பூ நாறும் இடை ஒதுங்கும்.
சங்குவளை தோள் அரிவை
கண்பனி சிந்தி எங்கும்
தனங்களை நனைத்தவள்
மன்னவனை நினைத்து
மனதிலே பதியம் வைத்தாள்.
அருந்தாத மதுக்குடம்
அணைக்காத  புதுச் சரசம்
விரல்பட்டு உடல் உறையும்
நிரைக் கட்டுக் கரும்பாக
படுக்கையிற் பிறந்திருந்தாள்.
தினம் தினம்.
.........................................
(அரி மடப் பிணை - ஆண் மானும் பெண் மானும்;
பூ நாறும் இடை - பூக்கள் மணக்கும் ஒதுக்குப்புறம்;
சங்குவளை - சங்குகளால் செய்த வளையல்; அரிவை - பெண்;
கண்பனி - கண்ணீர்;
.
பதவுரை.
பாலைக் குமரி எனும் 
பருவ மங்கையிடம்
சாலப் பதிந்த மனம்
சாற்றும் கவிதை இது:

காதலுக்குக் கண் இல்லை;
கவிஞனுக்குத் தடையில்லை;
காதலியின் மேனியினைக்
கண்டு திளைந்துருக!

ஆதலினால் அவள் அழகில்
அடிமை கொண்ட மனம்
சாதனையாய் அதை மாற்றி
சங்கீதம் இசைக்கின்றது!

படித்து ரசிக்கின்ற 
பருவம் உடையோரும்;
பார்த்து ரசிக்கின்ற
பண்பு உடையோரும்

வேர்த்து ருசிக்கின்ற 
வார்த்தைப் பிரயோகம்;
நீர்த்துப் போகாமல்
நிலைக்கும் விதமாக

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: