RSS

மீழாத் துயில் கண்டு ஆறாத் துயர் கொண்டேன்! என் சித்தப்பாவே.



நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் .
கொக்குவில் பிரம்படிலேனை வதிவிடமாகவும்
கொண்ட ஆறுமுகம் முத்துக்குமாரு [ஓய...்வு பெற்ற தபால் ஊழியர் ]
அவர்கள் 04,01,2013,இன்று மாலை யாழ் கொக்குவில்லில் காலமானார் .
அன்னார் காலம்சென்ற ஆறுமுகம் +சின்னப்பிள்ளை தம்பதியினரின் .
அன்பு மகனும் .காலம்சென்ற ,சின்னையா +விசாலாட்சி தம்பதியினரின் .
அருமை மருமகனும் ,திலகவதியின் பாசமிகு கணவரும் ,
புனிதநாதன் [தபாலகம் நயினாதீவு ]சிவநாதன் [ஜேர்மனி ]ஜெகநாதன் [ஜேர்மனி ]
மகேந்திரநாதன் [ஜேர்மனி ]சந்திரகலா .ஆகியோரின் அன்புத்தந்தையும் ,
சோதிராசா(டென்மார்க்) சிறிகந்தராஜா(சுவிஸ்) மணிவாசகர்(சுவிஸ்) சிவகலை(டென்மார்க்)
ஆகியோரின் சிறிய தந்தையும்,
இந்திராணி ,வசந்தமாலினி [ஜேர்மனி ]சிவதர்சினி .[ஜேர்மனி ]ஜெயந்தி [ஜேர்மனி ]
சுகேந்திரன் [ஆசிரியர் யா /இந்து மகளிர் கல்லூரி ]ஆகியோரின் .பாசமுள்ள மாமனாரும் ,
காலம்சென்றவர்களான .நாகமுத்து ,பொன்னம்பலம் ,சின்னம்மா ,முருகேசு ,விசாலாட்சி ,மாணிக்கம் ,
மற்றும் பொன்னம்மா ,நாகரெத்தினம் ஆகியோரின் .அன்பு சகோதரரும் ,
காலம்சென்றவர்களான ,திருநாவுக்கரசு ,சிவகங்கை ,மற்றும் .மகாலிங்கம் ,குற்றாலம், இராசரெத்தினம் ,
ஆகியோரின் அருமை மைத்துனருமாவார் .அன்னாரின் இறுதிக்கிரிகைகள் ,06,01,2013,ஞாயிற்றுக்கிழமை ,
காலை 10;30 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் ,
இவ் அறிவித்தலை .உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
செல்லத்துரை சிறிகந்தராஜா (கங்கைமகன்)
04.01.2013

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: