RSS

Showing posts with label புராண கதைகள். Show all posts
Showing posts with label புராண கதைகள். Show all posts

அது



இன்று மதியம் சுவிற்சர்லாந்தின் தலைநகரம் BERN  சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். நகரத்தை இணைக்கும் Tram வண்டிகள் இங்கு சிவப்பு நிறம். தூரத்தில் பார்த்தால் இராட்சத அட்டைகள் ஊர்ந்து வருவதுபோன்ற ஒரு தோற்றம். ஒரு நிமிடத்திற்கு ஒரு Tram இருந்தாலும் மக்கள் ஓடிவந்தே ஏறுகிறார்கள் அவளவு பிசி. இந்தப் போக்குவரத்து மதிய நெரிசலிலும் Police வாகனம் சத்தம்போட்டு நீல வெளிச்சத்துடன்  மற்றைய வாகனங்களை ஓரங்கட்டி முந்திச் செல்கிறது. கூட்டத்தில் நின்ற ஒருவர் இவர்கள் ஏதோ கடமையில் ஓடுகிறார்கள் என்று நினைக்காதையுங்கோ; அவர்களும் மதியச் சாப்பாட்டிற்குத்தான் ஓடுகிறார்கள் என்றார். நானும் யோசித்துப் பார்த்தன். சரிபோலவே இருக்கிறது. ஏனென்றால் மதியவேளையில்தான் நாலாபக்கத்தாலும் அவர்கள் அதிகமாக ஓடுவதைக் கண்டிருக்கிறேன். இந்தப் பிரகண்டமான நேரத்தில்தான் நானும் மதிய உணவுக்காகப் புறப்பட்டேன்.

சாப்பாடுகள் தெருத்தெருவாக இருந்தும் எதைச்சாப்பிடுவது என்ற பிரச்சனை. அதனால்தான் வெள்ளைக்காரன் இன்று என்ன சாப்பிடவேண்டும் என்பதைச் சென்ற வருடமே எழுதிவைத்துவிடுவான். இன்று என்ன செய்யவேண்டும் என்பதை பாத்றூமுக்குள் இருக்கும்போதுதான் பெரும்பாலானவர்கள் பார்க்கிறார்கள் என்று எங்களுக்கு மொழி படிப்பித்த வாத்தியார் 30 வருடங்களுக்கு முதல் சொல்லித்துந்தவர். வெள்ளைக்காரன் சமைக்கும் நேரம் குறைவு. ஆனால் அதே சாப்பாட்டைச் சாப்பிடும் நேரம் அதிகம். நாம் சமைக்கும் நேரம்  அதிகம். அதைச் சாப்பிடும் நேரம் குறைவு. சிலர் சோற்றுக் கவளங்களை வாய்க்குள் எறிந்து எறிந்து சாப்பிடுவதைப் பார்த்து இருக்கிறன். அவளவு பிசி.  

ஒரு உணவு விடுதியில் ஒரு பிற்சாவுடனும் ஒரு காப்பியுடனும் நான் உட்கார்ந்தேன். தூரத்தில் தமிழர் இருவர் சாப்பாட்டிற்காக ஆடர் கொடுத்துவிட்டு அமர்ந்து இருந்தனர். அவர்கள் மெதுவாகக் கதைப்பதாக எண்ணுகிறார்கள் ஆனால் சத்தம் வீதிவரை கேட்கிறது. பல கதைகளையும் கதைத்தார்கள். காதுகொடுத்துக் கேட்டேன். இறுதியில் கர்ணனைப்பற்றித் தொடங்கினார்கள். ஒருவர் உனக்கு கர்ணனைத் தெரியுமா என்று கேட்டார். மற்றவர் அவரைத் தெரியும் அவர் இப்போ கனடாவுக்குப் போய்விட்டார் என்று கூறினார். மற்றவர் கடுப்பானார். நான் கேட்பது பாரதத்தில்வரும் கர்ணனைப்பற்றி என்றார். அவர்கள் கதையில் நான் பொறுக்கி எடுத்தவற்றைக் கீழே தருகிறேன்.

கர்ணனும் அருச்சுனனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரு மாலை நேரம் கண்ணனுக்குத் தெரியாமல் ஆற்றங்கரைக்குச்  சென்றார்களாம். செல்லும் வழியில் ஒரு குடிசை. குடிசைக்குள் ஒரு தகப்பனும் மகனும் இருந்தார்கள். கர்ணனுக்கு தண்ணீர்த்தாகம் எடுத்ததாம். உடனே இருவரும் அந்தக் குடிசைவீட்டுக்குச் சென்று தாகத்தைப் போக்கிக் கொண்டார்கள். அந்த வீட்டு மகனைக் கர்ணனுக்குப் பிடித்திருந்ததாம். கர்ணன் தகப்பனிடம் மகனைத் தரும்படி கேட்டாராம். தகப்பனும் கொடுத்துவிட்டார். கர்ணன் சொன்னாராம். இவனை உச்சியில் இருந்து பாதியாக வெட்டி இன்று ஒரு பாதியையும் மறுவாரம் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்வதாக அந்தத் தகப்பனிடம் கூற தகப்பனும் சம்மதித்தாராம். கர்ணன் ஒரு உத்துரவு போட்டார். வெட்டும்போது பிள்ளை அழக்கூடாது என்று. வெட்டத் தொடங்கியாகிவிட்டது. வலப்பாகத்தை இன்று கொண்டு செல்வது என்றும் முடிவாகியது. வெட்டிக்கொண்டு இருக்கும்போது இடப்பாகத்துக் கைவிரல்களால் கண்ணீர் பொலு பொலு வென்று ஓடியதாம். அருச்சுனன் ஏன் இவன் அழுகிறான் என்று தகப்பனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு தகப்பன் தன்னையும் (அதாவது இடப்பக்க பாதி) இன்றைக்கே அழைத்துப் போகச் சொல்லி அழுகிறது என்றாராம். கதை சொல்லியவர் கடைசியில் மற்றவரைப் பார்த்து எப்படி என் கதை என்றார். மற்றவர் "நீ சின்ன வயதில் படித்த கம்பராமாயணக் கதைகளை எப்படி நினைப்பு வைத்திருக்கிறாய் என்று கேட்டார். எனக்குப் புரக்கடித்தது. வெளியில் வந்துவிட்டேன். நன்றி. காசு கொடுத்துவிட்டுத்தான் வந்தேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரா...ரா....


சிவபூமி இது சித்தர்களில் ஒருவரான திருமூலரின் இலங்கையைப் பற்றியகூற்றாகும்.  இதற்குக் காரணம் இலங்கையில் சிவனை வழிபடும் மக்கள் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். "இராவணன் மேலது நீறு! எண்ணத்தகுவது நீறு" இது திருநீற்றின் பெருமைக்கு இராவணனும்  ஒரு காரணம் என்பதைத் திருஞானசம்பந்தர் வாயிலாக நாம் அறிந்த உண்மையாகும். கம்பரின் காமன் என்ற சொல்லை மாற்றிக் கருணைஉளம் கொண்ட கலைஞனாக இராவணனைப்  பார்த்தவர் சம்பந்தராவார். ஒருவன் கதாநாயகனாக வரவேண்டுமானால் அதே கதையில் ஒருவனை வில்லனாக நடிக்கவைக்கவேண்டும் என்பது காப்பியங்களின் பண்பு.  இராவணன் நடித்தாரா நடிக்க வைக்கப்பட்டாரா என்பதில்தான் குழப்பங்கள்.
.
இராவணனுக்கு எப்பவும் தொடாமல் தூக்கும் பழக்கம் இருந்தது. தாய் சிவபக்தை தன்  வயதான காலத்தில் சிவன்கோவிலுக்குச் சென்று வணங்கமுடியாது என்பதால் இராவணன் சிவனை மலையுடன் சேர்த்துத் தாய்க்காகத் தூக்கியவர். அதேபோல் சீதையைத் தொடாமல் தூக்குவதற்கும் பல காரணங்கள்  இருந்ததன. அவை என்னவென்று காண்பதில்தான் குழப்பம். இராவணனுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். இது தணிக்கை செய்யப்பட்ட ஒரு கதை. ஒருவர் பெயர் யாவா; மற்றவர் பெயர் சுமத்திரா. இந்த இரு தங்கையருக்கும் அவர்கள் பெயரில் சீதனம் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தோனேசியாவில் இருக்கும் யாவா; சுமத்திரா. இராவணனது ராச்சியம் தென்னிழக்காசியாவில் பரந்து இலங்கையைத் தலைநகராகக் கொண்டு திகழ்ந்தது என்பதற்கு இதுவே போதுமானதாகும். இடையில் ஒரு காமடி.
.
இராமாயணத்தில் இராமரினதும் சீதையினதும்  வயது குறிப்பிடப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது அவளுக்கு வயது 18 என்று சொல்கிறார்கள். சீதை அசோகவனத்தில் அனுமானைப் பார்க்கும்போது   இராமரோடு அயோத்தியைவிட்டுக் காட்டிற்கு வந்து 12 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறாள். அப்படி என்றால் உப்பரிக்கையில் இருந்து சீதை இராமரை விசுவாமித்திரரோடு பார்த்தபோது அவளுக்கு வயது 6. இந்த 6 வயதுக் குழந்தை பார்த்ததையா கம்பர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றும்; தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது.


அழைப்பின் பெயரில் சிவனிடம் கைலைமலைக்குச் சென்ற இராவணன் சகல வல்லமைகளும் பெற்றுத்திரும்பும் வழியில் வானத்தில் உமாதேவியார் இராவணன்முன் தோன்றகிறார். என்னிடமும் சில வரங்களை வாங்கிச் செல் மகனே என்று உமாதேவியார் சொல்கிறார். சிரித்துவிட்ட இராவணன் கடலுக்கே உப்பா என்ற பாணியில் சிவனைவிட இந்த உலகத்தில் ஒருவரும் எனக்குப் பெரிதில்லை. உனது வரத்தை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்கிறான். ஆத்திரம் அடைந்த தேவியார் இராவணனுக்கு "உன்னை ஒரு பெண்ணாலே அழித்துக் காட்டுகிறேன்" என்று சபதம் இடுகிறார். இராவணன் போடி என்று மகத்திற்குள் சொல்லி நாடு திரும்புகிறான்.
.
இராவணனுக்கு முதலாவதாகப் பெண்குழந்தை பிறக்கிறது. உமாதேவியாரின் சாபத்தை நினைத்துத் தன்னுள் பயந்த இராவணன் அந்தக் குழந்தையை யனகரின் வயலில் கொண்டு சென்று விடுகிறான். யனகர் அந்தக் குழந்தையை எடுத்துச் சீதை என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

இராமருடன் காட்டுக்குச் சென்ற சீதை அங்கு துன்பப்படுவதை ஒரு தகப்பனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாமல் சீதையைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் பாதுகாப்பாக வைக்கிறான் இராவணன். வால்மீகிககு இது தெரிந்திருந்தும் வித்தியாசமான போக்கில் கதையை வணக்கம் வரை கொண்டு செல்கிறார்.
.
இராவணனுக்கு ஒரு மகனும் இருந்தான் அவன் பெயர் இந்திரசித்து.  சீதை சகோதரி என்ற விடையம் இந்திரசித்துக்குத் தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடி உல்லாசமாக வாழும் இந்திரசித்து சீதையின் அழகைக்கண்டு கவர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டால் குலத்திற்கே நாசம் என்பதை எண்ணிய இராவணன் சீதையைத் தூக்கி அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்திருக்கலாம் என்பதற்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
.
இராவணன் ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொடுவானாக இருந்தால் தலைவெடித்து இறப்பான் என்பது கடவுள் வரங்களில் ஒன்று. அதனால்தான் சீதையைத் தொடாமல் தூக்கினான் என்பதையும் உணரலாம்.  இராவணன் இராமர் வேடம் பூண்டு சீதையைத் தொடாமல் இருந்ததற்கும் இதுவே காரணமாகும். ஆனால் கம்பர் ஒரு ஏகபத்தினி விரதனின் உருவத்தை எடுக்க இராவணனுக்கு விருப்பம் இல்லை என்று கதாநாயகன் புகழ் பாடுகிறார். தலை வெடிக்கும் விடையத்தைச் சீதையும் பணிப்பெண்கள் மூலமாக அறிந்து பயம் தெளிந்து இருந்தாள் என்று வால்மீகி கூறுகிறார். .
.
இராமாயணத்தில் போர்முறைகளுக்கு எதிராக வாலியை இராமர் ஒளித்திருந்து தான் கொன்றார் என்று சொன்னவர்கள் அதுதான் அவரது விதி என்று கணக்கை மூடி இராமரை மீட்கின்றார்கள். எது எப்படி இருப்பினும் இராவணனைக் கொன்றவுடன் இராமர் தனது ஆன்மாவைத் தானே கொன்றேன் என்ற குற்ற உணர்வுக்குள் வந்தார் என்று ஒரு ஞானி கருதுவது சரியாக இருக்கிறது. ஆன்மாக்கள் ஒன்று அவை பலவடிவங்களில் பூமியில் தோன்றுகின்றன என்பது நியதி. உலக வரலாற்றில் ஒரு பெண்ணுக்காக நடந்த பெரிய சண்டையும் பெரிய கொல வெறியும் இதுவாகும். பெரியார் சொன்னதுபோல் இந்தப் புத்தகத்தை ஒழித்திருந்தால் அதற்குப் பிற்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் வந்திருக்காது. விடிய விடிய இராமர் கதை. விடிந்தால் சீதை இராமருக்கு என்னமுறை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்பரசன்

அனைவருக்கும் வணகக்கம் நீண்ட நாட்களின் பின் என் இனிய தோழமைகளைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.

படத்தில் கண்ணன் இத்தாலி நாட்டுப் பெண்களுடன் Sபெயின் நாட்டுக் கடற்கரையில் நிற்பதாக நினைத்து விடவேண்டாம். அவரைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் முனிவர்களாக இருந்து பெண்களாகப் பூமியில் வந்து பிறந்தவர்கள்.
.
அதிகமானவர்களுக்கு இராமனும் கண்ணனும் அவதார புருசர்கள் என்று தெரியும். ஆனால் இராம அவதாரமா கண்ணனன் அவதாரமா முதல் வந்தது என்பதில் சந்தேகம் உண்டு. இரண்டுபேரும் காவிய நாயகர்களாகச் சிததரிக்கப் பட்டுள்ளார்கள். இரண்டு காவியங்களையும் இதிகாசங்கள் என்று அழைப்பர் ஆன்றோர்கள். தேவாரம் திருவாசகம் எழுகின்ற காலங்களுக்கு முதல் ஆலயங்களில் இவை பாராயணம் என்ற வடிவத்தில் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் ஒரு பாடல்.
"அன்று இலங்கை பொருதழித்த அவனே அந்தப் பாரதப் போர் முடித்து வென்றிலங்கு கதிராளி விசயதரன் என உதித்தான்" என்ற பாடல் இருக்கின்றது.

இதன் அடிப்படைடயில் அன்று இலங்கை பொருதழித்தான் என்பதில் இராமன் இலங்கையுடன் சண்டைபிடித்தான் என்ற கருத்து வருகிறது. அவனே அந்தப் பாரதப் போர் முடித்து என்பதில் இராமன்தான மீண்டும் கண்ணனாக அவதாரம் எடுத்தான் என்ற பொருள் வருகிறது. இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தில் இராமனுக்குப் பின்னரே கண்ணன் அவதாரம் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தப் பாடலும் விசயதரன் என்ற சோழச் சக்கரவர்த்தி ஒரு கடவுள் அவதாரமாகக் காட்டப் படுவதற்காகச் சோழர்  காலத்ததில் எழுந்த பாடலாகும. கீழே வரும் கதைப்போக்கிற்கு இந்தப் பாடல் முக்கியமானதாககும். சோழர் காலத்தில் அரசனைத் தெய்வமாக மதிக்கும் பண்பு இருந்தது.

பாரதப்போரின் உச்சக் கட்டம் துரோணரும் துரியோதனனும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கருவைக் கலைத்துப் பாண்டவர்களை வேருடன் அழிக்க எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றைத் தாக்கி  உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
.
இதிலிருந்து அவளைக் காப்பாற்ற ஒரு யோசனை சொல்லப்பட்டது. அவளது வயிற்றைப்  பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும். ஆனால் அவளது வயிற்றைத் தடவப் பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரபலமாக இருந்த பெரிய முனிவர்களும் பிரமச்சாரிகளும் தங்கள் நிலையில் தவறி இருந்தார்கள் என்பதுவே நிரூபணமாகிறது. ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவித் திரிந்த கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவி வலிபோக்கி உயிர்காக்க முன்வந்தான. இதனால் பிரம்மாஸ்திரக் கட்டு விலகி உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் கண்ணனால் காப்பாற்றப்பட்டன. இங்குதான் திரைவிலகிக் காட்சி மாறுகிறது. கிருஷ்ணன் எப்படிப் பிரம்மச்சாரி ஆவாரர் என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்  வியப்பாக எழுகிறது. புராணங்களின் குட்டு மீண்டும் மீண்டும் உடைக்கப் படுவததற்கு இந்தச் சம்பவம் ஓரு காரணம் என்று மக்கள் கருதலாம்.
.
இராம அவதார காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர். (முனிவர்கள் போயும் போயும் ஒரு ஆணைணப் பார்த்து மயங்கினர் என்றால் பெண்ணைப் பார்த்திருநந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை) தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். இதனைக் கம்பர்  ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று கூறுகிறார். இதனால்  ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்து தாங்கள் முற்பிறப்பில் விரும்பியபடி கண்ணனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை. (இதனை நான் சொல்லவில்லை புராணம் சொல்கிறது) அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.
.
நாம் படிப்பதற்குக் கீதை எனும் பாடம் தந்தான் என்பதில் மகிழும் கண்ணதாசன் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்பதிலும அர்த்தம் இருப்பதாக நான் கருதுதுகிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS