RSS

ரா...ரா....


சிவபூமி இது சித்தர்களில் ஒருவரான திருமூலரின் இலங்கையைப் பற்றியகூற்றாகும்.  இதற்குக் காரணம் இலங்கையில் சிவனை வழிபடும் மக்கள் ஆதிகாலம் தொட்டு வாழ்ந்தார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். "இராவணன் மேலது நீறு! எண்ணத்தகுவது நீறு" இது திருநீற்றின் பெருமைக்கு இராவணனும்  ஒரு காரணம் என்பதைத் திருஞானசம்பந்தர் வாயிலாக நாம் அறிந்த உண்மையாகும். கம்பரின் காமன் என்ற சொல்லை மாற்றிக் கருணைஉளம் கொண்ட கலைஞனாக இராவணனைப்  பார்த்தவர் சம்பந்தராவார். ஒருவன் கதாநாயகனாக வரவேண்டுமானால் அதே கதையில் ஒருவனை வில்லனாக நடிக்கவைக்கவேண்டும் என்பது காப்பியங்களின் பண்பு.  இராவணன் நடித்தாரா நடிக்க வைக்கப்பட்டாரா என்பதில்தான் குழப்பங்கள்.
.
இராவணனுக்கு எப்பவும் தொடாமல் தூக்கும் பழக்கம் இருந்தது. தாய் சிவபக்தை தன்  வயதான காலத்தில் சிவன்கோவிலுக்குச் சென்று வணங்கமுடியாது என்பதால் இராவணன் சிவனை மலையுடன் சேர்த்துத் தாய்க்காகத் தூக்கியவர். அதேபோல் சீதையைத் தொடாமல் தூக்குவதற்கும் பல காரணங்கள்  இருந்ததன. அவை என்னவென்று காண்பதில்தான் குழப்பம். இராவணனுக்கு இரண்டு தங்கைகள் இருந்தார்கள். இது தணிக்கை செய்யப்பட்ட ஒரு கதை. ஒருவர் பெயர் யாவா; மற்றவர் பெயர் சுமத்திரா. இந்த இரு தங்கையருக்கும் அவர்கள் பெயரில் சீதனம் கொடுக்கப்பட்ட இடம்தான் இந்தோனேசியாவில் இருக்கும் யாவா; சுமத்திரா. இராவணனது ராச்சியம் தென்னிழக்காசியாவில் பரந்து இலங்கையைத் தலைநகராகக் கொண்டு திகழ்ந்தது என்பதற்கு இதுவே போதுமானதாகும். இடையில் ஒரு காமடி.
.
இராமாயணத்தில் இராமரினதும் சீதையினதும்  வயது குறிப்பிடப்படுகிறது. ஆரண்ய காண்டத்தில் சீதையை இராவணன் தூக்கிச் செல்லும்போது அவளுக்கு வயது 18 என்று சொல்கிறார்கள். சீதை அசோகவனத்தில் அனுமானைப் பார்க்கும்போது   இராமரோடு அயோத்தியைவிட்டுக் காட்டிற்கு வந்து 12 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்கிறாள். அப்படி என்றால் உப்பரிக்கையில் இருந்து சீதை இராமரை விசுவாமித்திரரோடு பார்த்தபோது அவளுக்கு வயது 6. இந்த 6 வயதுக் குழந்தை பார்த்ததையா கம்பர் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றும்; தோள் கண்டார் தோளே கண்டார் என்றும் சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது.


அழைப்பின் பெயரில் சிவனிடம் கைலைமலைக்குச் சென்ற இராவணன் சகல வல்லமைகளும் பெற்றுத்திரும்பும் வழியில் வானத்தில் உமாதேவியார் இராவணன்முன் தோன்றகிறார். என்னிடமும் சில வரங்களை வாங்கிச் செல் மகனே என்று உமாதேவியார் சொல்கிறார். சிரித்துவிட்ட இராவணன் கடலுக்கே உப்பா என்ற பாணியில் சிவனைவிட இந்த உலகத்தில் ஒருவரும் எனக்குப் பெரிதில்லை. உனது வரத்தை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிப் பயணத்தைத் தொடர்கிறான். ஆத்திரம் அடைந்த தேவியார் இராவணனுக்கு "உன்னை ஒரு பெண்ணாலே அழித்துக் காட்டுகிறேன்" என்று சபதம் இடுகிறார். இராவணன் போடி என்று மகத்திற்குள் சொல்லி நாடு திரும்புகிறான்.
.
இராவணனுக்கு முதலாவதாகப் பெண்குழந்தை பிறக்கிறது. உமாதேவியாரின் சாபத்தை நினைத்துத் தன்னுள் பயந்த இராவணன் அந்தக் குழந்தையை யனகரின் வயலில் கொண்டு சென்று விடுகிறான். யனகர் அந்தக் குழந்தையை எடுத்துச் சீதை என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

இராமருடன் காட்டுக்குச் சென்ற சீதை அங்கு துன்பப்படுவதை ஒரு தகப்பனால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாமல் சீதையைத் தூக்கிச் சென்று அசோகவனத்தில் பாதுகாப்பாக வைக்கிறான் இராவணன். வால்மீகிககு இது தெரிந்திருந்தும் வித்தியாசமான போக்கில் கதையை வணக்கம் வரை கொண்டு செல்கிறார்.
.
இராவணனுக்கு ஒரு மகனும் இருந்தான் அவன் பெயர் இந்திரசித்து.  சீதை சகோதரி என்ற விடையம் இந்திரசித்துக்குத் தெரியாது. காட்டுக்குள் வேட்டையாடி உல்லாசமாக வாழும் இந்திரசித்து சீதையின் அழகைக்கண்டு கவர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டால் குலத்திற்கே நாசம் என்பதை எண்ணிய இராவணன் சீதையைத் தூக்கி அவளுக்குப் பாதுகாப்புக் கொடுத்திருக்கலாம் என்பதற்கும் வாய்ப்புகளும் இருக்கின்றன.
.
இராவணன் ஒரு பெண்ணை விருப்பம் இல்லாமல் தொடுவானாக இருந்தால் தலைவெடித்து இறப்பான் என்பது கடவுள் வரங்களில் ஒன்று. அதனால்தான் சீதையைத் தொடாமல் தூக்கினான் என்பதையும் உணரலாம்.  இராவணன் இராமர் வேடம் பூண்டு சீதையைத் தொடாமல் இருந்ததற்கும் இதுவே காரணமாகும். ஆனால் கம்பர் ஒரு ஏகபத்தினி விரதனின் உருவத்தை எடுக்க இராவணனுக்கு விருப்பம் இல்லை என்று கதாநாயகன் புகழ் பாடுகிறார். தலை வெடிக்கும் விடையத்தைச் சீதையும் பணிப்பெண்கள் மூலமாக அறிந்து பயம் தெளிந்து இருந்தாள் என்று வால்மீகி கூறுகிறார். .
.
இராமாயணத்தில் போர்முறைகளுக்கு எதிராக வாலியை இராமர் ஒளித்திருந்து தான் கொன்றார் என்று சொன்னவர்கள் அதுதான் அவரது விதி என்று கணக்கை மூடி இராமரை மீட்கின்றார்கள். எது எப்படி இருப்பினும் இராவணனைக் கொன்றவுடன் இராமர் தனது ஆன்மாவைத் தானே கொன்றேன் என்ற குற்ற உணர்வுக்குள் வந்தார் என்று ஒரு ஞானி கருதுவது சரியாக இருக்கிறது. ஆன்மாக்கள் ஒன்று அவை பலவடிவங்களில் பூமியில் தோன்றுகின்றன என்பது நியதி. உலக வரலாற்றில் ஒரு பெண்ணுக்காக நடந்த பெரிய சண்டையும் பெரிய கொல வெறியும் இதுவாகும். பெரியார் சொன்னதுபோல் இந்தப் புத்தகத்தை ஒழித்திருந்தால் அதற்குப் பிற்பட்டவர்களுக்கு எந்தச் சிக்கலும் வந்திருக்காது. விடிய விடிய இராமர் கதை. விடிந்தால் சீதை இராமருக்கு என்னமுறை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கற்பரசன்

அனைவருக்கும் வணகக்கம் நீண்ட நாட்களின் பின் என் இனிய தோழமைகளைச் சந்திப்பதில் பெருமை கொள்கிறேன்.

படத்தில் கண்ணன் இத்தாலி நாட்டுப் பெண்களுடன் Sபெயின் நாட்டுக் கடற்கரையில் நிற்பதாக நினைத்து விடவேண்டாம். அவரைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாம் முற்பிறவியில் முனிவர்களாக இருந்து பெண்களாகப் பூமியில் வந்து பிறந்தவர்கள்.
.
அதிகமானவர்களுக்கு இராமனும் கண்ணனும் அவதார புருசர்கள் என்று தெரியும். ஆனால் இராம அவதாரமா கண்ணனன் அவதாரமா முதல் வந்தது என்பதில் சந்தேகம் உண்டு. இரண்டுபேரும் காவிய நாயகர்களாகச் சிததரிக்கப் பட்டுள்ளார்கள். இரண்டு காவியங்களையும் இதிகாசங்கள் என்று அழைப்பர் ஆன்றோர்கள். தேவாரம் திருவாசகம் எழுகின்ற காலங்களுக்கு முதல் ஆலயங்களில் இவை பாராயணம் என்ற வடிவத்தில் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டது. தமிழ் இலக்கியத்தில் ஒரு பாடல்.
"அன்று இலங்கை பொருதழித்த அவனே அந்தப் பாரதப் போர் முடித்து வென்றிலங்கு கதிராளி விசயதரன் என உதித்தான்" என்ற பாடல் இருக்கின்றது.

இதன் அடிப்படைடயில் அன்று இலங்கை பொருதழித்தான் என்பதில் இராமன் இலங்கையுடன் சண்டைபிடித்தான் என்ற கருத்து வருகிறது. அவனே அந்தப் பாரதப் போர் முடித்து என்பதில் இராமன்தான மீண்டும் கண்ணனாக அவதாரம் எடுத்தான் என்ற பொருள் வருகிறது. இந்தப் பாடலின் பொருள் விளக்கத்தில் இராமனுக்குப் பின்னரே கண்ணன் அவதாரம் நடைபெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். இந்தப் பாடலும் விசயதரன் என்ற சோழச் சக்கரவர்த்தி ஒரு கடவுள் அவதாரமாகக் காட்டப் படுவதற்காகச் சோழர்  காலத்ததில் எழுந்த பாடலாகும. கீழே வரும் கதைப்போக்கிற்கு இந்தப் பாடல் முக்கியமானதாககும். சோழர் காலத்தில் அரசனைத் தெய்வமாக மதிக்கும் பண்பு இருந்தது.

பாரதப்போரின் உச்சக் கட்டம் துரோணரும் துரியோதனனும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கருவைக் கலைத்துப் பாண்டவர்களை வேருடன் அழிக்க எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது அபிமன்யு மனைவி உத்தரையின் வயிற்றைத் தாக்கி  உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.
.
இதிலிருந்து அவளைக் காப்பாற்ற ஒரு யோசனை சொல்லப்பட்டது. அவளது வயிற்றைப்  பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும். ஆனால் அவளது வயிற்றைத் தடவப் பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரபலமாக இருந்த பெரிய முனிவர்களும் பிரமச்சாரிகளும் தங்கள் நிலையில் தவறி இருந்தார்கள் என்பதுவே நிரூபணமாகிறது. ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவித் திரிந்த கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவி வலிபோக்கி உயிர்காக்க முன்வந்தான. இதனால் பிரம்மாஸ்திரக் கட்டு விலகி உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் கண்ணனால் காப்பாற்றப்பட்டன. இங்குதான் திரைவிலகிக் காட்சி மாறுகிறது. கிருஷ்ணன் எப்படிப் பிரம்மச்சாரி ஆவாரர் என்ற கேள்வியே எல்லோர் மனதிலும்  வியப்பாக எழுகிறது. புராணங்களின் குட்டு மீண்டும் மீண்டும் உடைக்கப் படுவததற்கு இந்தச் சம்பவம் ஓரு காரணம் என்று மக்கள் கருதலாம்.
.
இராம அவதார காலத்தில் தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர். (முனிவர்கள் போயும் போயும் ஒரு ஆணைணப் பார்த்து மயங்கினர் என்றால் பெண்ணைப் பார்த்திருநந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை) தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். இதனைக் கம்பர்  ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று கூறுகிறார். இதனால்  ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்து தாங்கள் முற்பிறப்பில் விரும்பியபடி கண்ணனைக் கட்டித் தழுவி மகிழ்ந்தனர். ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை. (இதனை நான் சொல்லவில்லை புராணம் சொல்கிறது) அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றிப் புகழ்ந்தார்கள்.
.
நாம் படிப்பதற்குக் கீதை எனும் பாடம் தந்தான் என்பதில் மகிழும் கண்ணதாசன் "யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என்பதிலும அர்த்தம் இருப்பதாக நான் கருதுதுகிறேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முல்லையூரான் - (க)விதை - 17


சாளரம்  திறந்த
சோலை மலர்களைக்
காற்றுக் குழந்தைகள்
பிய்த்து விளையாடின.
மகேசன் முடி தவளும்
தண்மதி பார்ப்பதற்காய்
ஓடிவந்த முகில்கள்
பழந்தமிழர் வரலாறாய்
இனத்துக்குள் அடிபட்டு
வெளிச்சங்கள் போட்டுத்
தூரநின்று அழுதுதழுது
தொலைந்தே போயின.
பந்துகளாய் உருளும்
வெள்ளை முயல்களில்
பட்டாம்பூச்சிச் சவாரிகள்
வானுலக மாளிகையில்
கனவில் பூத்தவளைக் 
காந்தள் மலராளை
நினைவில் சுமந்தவன்.
நிரை காக்கும் நிலத்தில்
மாதுளம்பூ நிறத்தாளின்
வளியிடை நுழையா
முயங்கிய இன்பத்தில்
கனியிடைச் சுவையை
நசித்துப் புசித்தவன்.
முந்தானைக் கடனைக்
கழிக்க நினைத்துக் - குடி
சேறும் இளவேனில்.
மானொத்த நீள்விழியாள்
வசமான இதயத்தில்
இசைவாழும் உள்ளத்தில்
மூச்சு காற்றுக்குள் அவள்
உமிழ்ந்த  செல்ல மொழிகள்
என்றும் எழுதா வேதங்கள்.
துயில் அழகு பார்த்தவன்
துகில் விலகும் எண்ணத்தில்
மயில் கொண்ட அச்சத்தைக்
கார்குழற் பாய்மீது
உறங்கிக் களித்தவன்.
இதழோடு இதழ்வைக்க
இமைமூடும் இல்லத்தாள்
சங்கத்து முல்லைக்கு
இருத்தலே ஒழுக்கம் என்று
இருந்திட்ட இளவரசி
முடங்கல் மடல்கண்டு
உடைந்த தரளத்துப்
பொடி எறிந்த மேனியளாய்
முல்லையூரான் முன்வந்து
இருமரம் தாங்கி நின்றாள். 
........................................
சாளரம் - யன்னல்; மகேசன் - சிவன்; சவாரி - ஓட்டுதல்; நிரை - மந்தைக்கூட்டம்;
வளியிடை நுழையா - காற்றுப் போமுடியாத; முயங்கிய - இறுக்கி அணைத்தல்;
குடி - வீடு; சேறும் - திரும்புதல்; துயில் - தூக்கம்; துகில் - உடை; கார்குழல் - கரியகூந்தல்;
இருத்தல் - ஐவகை ஒழுக்கங்களில் ஒன்று; முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்;
முடங்கல் - கடிதம்; தரளம் - முத்து; பொடி - தூள்; எறிந்த - அப்புதல்;
இருமரம் - ஆல் + அத்தி (ஆலாத்தி)

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஐயுறுநிலை


இருள் உமிழ்ந்த இரவில்
அவிழ்ந்த  அல்லிக்குள்
கமழ்ந்தெழும் வாசமாகிப்
பொங்கி எழு  பாலாய்
மாடத்துப் புறாக்களுக்கு
மதனரசம் விஞ்சி நிற்கும்.
போகத்தால் தேகத்தில்
பொருதல் சமர் நடத்திக்
கூடலுக்குத் தீமூட்டி
மெய் எரிக்கும் காமத்தீ!
நீள்வழி சென்ற காளை
மீள்வழி சுணங்கும் காலை;
பூவிதழ்  இதுதான் என்று
பலரிதழ் பட்டுச்சிவந்த
பரத்தையர் அதரம் தன்னை
என்நீத்துக் களிப்பாயோ?
இளமுகிழ் மார்பதனில்
தொய்யிற்படம் பார்த்தவன் நீ;
என்றாங்கு மனமுடைந்து
தென்றலுக்குத் தேள்கொட்டித்
தோளெல்லாம் வலித்திருக்கும்.
சூடிழந்த  கொதிநீராய்
ஆடிப்போய் ஆறி இங்கு
கோதைக்கு ஊடல் ஏறி
பூக்குலைத்துப் பொட்டழித்து
மைதீட்டும் கண்ணுடைந்து
வாடிப்போய்ச் சாய்ந்திருக்கும்.
அத்தாணி மண்டபத்தில்
அத்தானின் மஞ்சத்தில்
கோடிவரம்  நாடியவள்
துணைவரவு காணாமல்
வேர்ப்பலாச் சுழை நிகர்த்த
செம்பருத்திச் சிற்பம் - இங்கு
மரித்து மடிகின்றாள்.
தரை இடை பாய்ந்து
தத்தளிக்கும் மீனாக
இசை இறந்த யாழாய்
நரம்பறுந்து பாழாகித்
தணலிடை குளிப்பதைத்
தடுக்காதே செவிலி என்று
ஈமம் வளர்த்த கிளி;
ஓங்குவரை சென்று
குதிக்கின்ற மனத்தாளாய்க்
குமிறி அழுதிட்டாள்.
.......................................................................................
மதனரசம் - காம உணர்வு; பொருதல் - உறவு; சமர் - போர்;
நீள்வழி - நெடுந்தூரம்; மீள்வழி - திரும்பி வருதல்;
என்நீத்து - என்னைவிட்டுவிட்டு; இளமுகிழ் - அரும்பு
தொய்யில் - மார்பகத்தில் கீறிய படங்கள்;
துணைவரவு - கணவனின் வருகை
செவிலி - வளர்ப்புத்தாய்; ஈமம் - சுடலை நெருப்பு; ஓங்குவரை - மலைஉச்சி

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆண்மைத்தவறு



நியங்களைப் பகற்பொழுதில்
நிழற்படம் பிடித்தவன்
நீழ்துயில் கொள்ளுகின்ற
அயரும் மாலைப்பொழுது.
கானகத்து மஞ்ஞைகள்
கழிநடம் புரிந்தகாலை
கார்பொழில் கனத்த நெய்தல்.
நெறிபடு கூந்தல் கட்டி
எறிவளி கமழும் வேளை
பொன்வண்டு முகம் மோதும்
பகன்றைப்பூப் பரத்தையர்கள்.
கத்தாளைத் தொடைகொண்டு
கருவிளைப்பூ இடை மிளிர
ஆடிப்பாவையில் அழகுபார்த்து
மருள்விழிச் சேலை காட்டி
நடிப்பினில் நாணம் தாங்கி
நாணத்தில் நளினம் ஊற்றி
நளினத்தில் உயிரை வாங்கும்
மெத்தைக்கு வித்தைக்காரர்.
அப்பிய அங்கமெல்லாம்
அந்தரத்தில் தொங்குகின்ற
உப்பிய அழகு பார்த்துக்
குறும்பறை ஆடும்வேளை
சொற்பனத்தில் சுற்றினின்று
தணிகின்ற தணலாகி
நீறாகிப் போகின்றார்.
சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அடிபட்ட தேகங்கள்
நெரிபட்டுச் சுகம் கண்டு
சந்துகளில் சரசம் ஆடி
உயிருக்குள் சிந்துபாடி
விழலுக்கு நீரிறைத்து
விடியும்கரை கமம் செய்வார்.
ஊமைக் காயம் தாங்கி
தேய்புரி பழங்கயிறாய்
அல் வந்து இல் ஏகும்
உழவுநில  மாந்தருக்கு
நித்தம் ஒரு தேன் நிலவு.
.....................................
கார்பொழில் - மழை; மஞ்ஞை - மயில்; நெறிபடு - கறுப்பு; எறிவளி - வீசும் காற்று
ஆடிப்பாவை - முகம் பார்க்கும் கண்ணாடி; சேலை - கண்ணால் ஜாடை காட்டுதல்
உப்பிய - பெரிய; குறும்பறை - ஒருவகைப் பறவை; விழல் - களை; கமம் - தோட்டம்
தேய்புரி பழங்களிறு - திறப்பணக் கயிறு; அல் - இரவு; இல் - வீடு
நெரிதல் - இறுகுதல்; ஏகும் - திரும்பிப் போகுதல்...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலை அரசன்


அவிழ்ந்த குறிஞ்சிப் பூக்களை
உமிழ்ந்த விளைநிலம்
பூவியரசி முலை பார்க்க
அதிகாலையில் எழுந்த
சூரிய தாகங்களை விரட்ட
மலை முகடுகளை
மறைத்துச் சிலிர்க்கும்
முகில் சேலைகள்.
கொம்புத் தேன் சுமந்த
புலிப்பலணிந்த வரைமகளிர்.
கொற்றவன் மாடத்தில்
குவிந்திருந்த பூவனத்தை
இதழ்பிடுங்கிச் சுவைபருக
இசைந்திட்ட கள்வர் கூட்டம்.
அரண் சுமந்து அடைத்த செய்தி
கொஞ்சத்தில் தெரிந்து
அவன் நெஞ்சத்திலே
நெரிஞ்சி முள்ளாகி
மறவன் புலத்து மாவீரன்
நாராய அம்புருக்கிச்
செறுவரை நோக்கிச்
சிவந்த கண்ணாளன்.
எயில் உடைத்து ஆங்கு
தன் அக்கினிப் பழத்தைக்
கொண்டவர் தலை கொய்து
களம் நடாத்திக் கைபிடித்த
தேக்குநிலச் சந்தனக் கட்டை.
புருசப் பசிபோக்க
எந்நாளும் பூத்திருக்கும்
இவள் பரிசமேனி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்திரச்சுமை

 

தரைநோக்கி வானம்
தவழ்ந்து வந்துவிட்டால்
பகலவன் பதிவில்வந்து
தாமரைக்கு இதழ்முத்தம்
தானாகக் கிடைத்துவிடும்.
ஒளிகசியும் கண்ணுக்குள்
உயிர்கசியும் மனத்தோடு
பருவத்தைக் களமாக்கிப
போராடும் புதுவசந்தும்.
பசலைக்கு வசப்பட்டுப்
படலைக்குள் காத்திருந்தாள்.
பூத்திருக்கும் மலர்களிலே
தேன் குடிக்கும் வண்டினங்கள்
கூத்தாடிக் களிப்பதனைப்
பார்த்திருந்து கண்வியர்த்துத்
தோழியிடம் தூதுசொல்லி
மான்குட்டித் துள்ளல்கொண்டு
இந்திரச் சுவைகள்காண
மந்திரத்தில் மறைந்தாள் பாவை.
இமயத்தைத் தூக்குபவன்
இளந்தாரிக் கற்கள் எல்லாம்
இருவிரலால் நகர்த்திக் காட்டும்
இரும்பனைய தோளுடையோன்
வரம்புகளை மீறுகின்ற
வாலிபத்தின் மிடுக்கோடு
முல்லைக்குத் தேராக
கிள்ளைக்குத் தோளானான்.
காற்றுப் புரவிக்குக்
கடிவாளம் அவளாகிப்
பள்ளிக்கு இடந்தேடி
கள்ளி வளர் காடுவரை
இருள்சூழும் வேளைக்குள
கரைமீது நடந்து சென்றான்
அங்குசக் கூர்கொண்டு
முதுகில் அறைகின்ற
அடித்துக் கனியும் பழமாக
நசிந்து கனிகிறது தனம்.
நால்வகைக் குணத்தாளில்
ஐந்துநில அழகுபார்த்து
ஆறுசுவை உணவையுண்டு
எழுபிறப்பின் பலனையெல்லாம்
எட்டுகின்ற இன்பச் சேற்றில்
நவரசம் கண்டார் இங்கே.
தூரத்தில் தோழி ஆங்கே
வெட்கத்தில் சிவந்து நின்றாள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதயத்திருடி. (க)விதை !

 
முல்லைப்பூ வெடிக்கின்ற
தேகத்தின் மணங்கமழும்
ஆம்பல்பூ முகத்தவளே;
அடுக்கிவைத்த பவளப்
பல்வரிசைப் பைங்கிளியே;
அத்திப்பூ இடைக்காறி;
ஆவரசம் பூ மேனி;
முத்தமிழில் நான் படித்த
மூன்றாம்பால் செந்தமிழே!

பொன் உருக்கும் உலை அருகில்
துடிக்கின்ற எறும்பாகக்
கள்ளிருக்கும் காந்தழ் மீது
கனநாளாய் ஆசை வைச்சன்.
வெட்டுக் கிளிபோன்ற
வேலெறியும் கண்களுக்குள்
கொடுத்தும் பறித்தும்
கணக்கின்றி இதழ்சிந்தும்
விசம் எனக்குத் தந்தவளே;
மாதுளைக் கனிதன்னில்

முகத்தினைப் புதைத்திங்கு
தலைகீழாய்ப் புவியெல்லாம்
சுத்தவைத்துச் சாகவைத்தாய்.
எழில் தோகை அருகிருந்து
சுவையரசி இயல் படித்தேன்.
இதயத்துள் அவளைப்போல்
சிற்பங்கள் பல செய்து
பணிமொழியாள் நாமத்தில்
பூசையிலே பூப்போட்டேன்.
பசித்தவளைப் படமாக்கி
அழ்மனத்தில் நான் ஒழித்தேன்.
உலகத்தை ஈடாக்கி
உன்னவளை அழி என்றால்
உலகையே அழித்துவிட்டு
என்னவளைக் களித்திருப்பேன்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெய்தல் தலைவன்!


சிறு மணல் வீடுகளை
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.

இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.

மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.

வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.

பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெய்தல் தலைவி!


உச்சி வெயிலை
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;

நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும்  நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS