RSS

Showing posts with label காதல் கவிதை. Show all posts
Showing posts with label காதல் கவிதை. Show all posts

ஆண்மைத்தவறு



நியங்களைப் பகற்பொழுதில்
நிழற்படம் பிடித்தவன்
நீழ்துயில் கொள்ளுகின்ற
அயரும் மாலைப்பொழுது.
கானகத்து மஞ்ஞைகள்
கழிநடம் புரிந்தகாலை
கார்பொழில் கனத்த நெய்தல்.
நெறிபடு கூந்தல் கட்டி
எறிவளி கமழும் வேளை
பொன்வண்டு முகம் மோதும்
பகன்றைப்பூப் பரத்தையர்கள்.
கத்தாளைத் தொடைகொண்டு
கருவிளைப்பூ இடை மிளிர
ஆடிப்பாவையில் அழகுபார்த்து
மருள்விழிச் சேலை காட்டி
நடிப்பினில் நாணம் தாங்கி
நாணத்தில் நளினம் ஊற்றி
நளினத்தில் உயிரை வாங்கும்
மெத்தைக்கு வித்தைக்காரர்.
அப்பிய அங்கமெல்லாம்
அந்தரத்தில் தொங்குகின்ற
உப்பிய அழகு பார்த்துக்
குறும்பறை ஆடும்வேளை
சொற்பனத்தில் சுற்றினின்று
தணிகின்ற தணலாகி
நீறாகிப் போகின்றார்.
சாமத்துப் போர்க்களத்தில்
காமத்துத் தீவிரத்தில்
அடிபட்ட தேகங்கள்
நெரிபட்டுச் சுகம் கண்டு
சந்துகளில் சரசம் ஆடி
உயிருக்குள் சிந்துபாடி
விழலுக்கு நீரிறைத்து
விடியும்கரை கமம் செய்வார்.
ஊமைக் காயம் தாங்கி
தேய்புரி பழங்கயிறாய்
அல் வந்து இல் ஏகும்
உழவுநில  மாந்தருக்கு
நித்தம் ஒரு தேன் நிலவு.
.....................................
கார்பொழில் - மழை; மஞ்ஞை - மயில்; நெறிபடு - கறுப்பு; எறிவளி - வீசும் காற்று
ஆடிப்பாவை - முகம் பார்க்கும் கண்ணாடி; சேலை - கண்ணால் ஜாடை காட்டுதல்
உப்பிய - பெரிய; குறும்பறை - ஒருவகைப் பறவை; விழல் - களை; கமம் - தோட்டம்
தேய்புரி பழங்களிறு - திறப்பணக் கயிறு; அல் - இரவு; இல் - வீடு
நெரிதல் - இறுகுதல்; ஏகும் - திரும்பிப் போகுதல்...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மலை அரசன்


அவிழ்ந்த குறிஞ்சிப் பூக்களை
உமிழ்ந்த விளைநிலம்
பூவியரசி முலை பார்க்க
அதிகாலையில் எழுந்த
சூரிய தாகங்களை விரட்ட
மலை முகடுகளை
மறைத்துச் சிலிர்க்கும்
முகில் சேலைகள்.
கொம்புத் தேன் சுமந்த
புலிப்பலணிந்த வரைமகளிர்.
கொற்றவன் மாடத்தில்
குவிந்திருந்த பூவனத்தை
இதழ்பிடுங்கிச் சுவைபருக
இசைந்திட்ட கள்வர் கூட்டம்.
அரண் சுமந்து அடைத்த செய்தி
கொஞ்சத்தில் தெரிந்து
அவன் நெஞ்சத்திலே
நெரிஞ்சி முள்ளாகி
மறவன் புலத்து மாவீரன்
நாராய அம்புருக்கிச்
செறுவரை நோக்கிச்
சிவந்த கண்ணாளன்.
எயில் உடைத்து ஆங்கு
தன் அக்கினிப் பழத்தைக்
கொண்டவர் தலை கொய்து
களம் நடாத்திக் கைபிடித்த
தேக்குநிலச் சந்தனக் கட்டை.
புருசப் பசிபோக்க
எந்நாளும் பூத்திருக்கும்
இவள் பரிசமேனி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்திரச்சுமை

 

தரைநோக்கி வானம்
தவழ்ந்து வந்துவிட்டால்
பகலவன் பதிவில்வந்து
தாமரைக்கு இதழ்முத்தம்
தானாகக் கிடைத்துவிடும்.
ஒளிகசியும் கண்ணுக்குள்
உயிர்கசியும் மனத்தோடு
பருவத்தைக் களமாக்கிப
போராடும் புதுவசந்தும்.
பசலைக்கு வசப்பட்டுப்
படலைக்குள் காத்திருந்தாள்.
பூத்திருக்கும் மலர்களிலே
தேன் குடிக்கும் வண்டினங்கள்
கூத்தாடிக் களிப்பதனைப்
பார்த்திருந்து கண்வியர்த்துத்
தோழியிடம் தூதுசொல்லி
மான்குட்டித் துள்ளல்கொண்டு
இந்திரச் சுவைகள்காண
மந்திரத்தில் மறைந்தாள் பாவை.
இமயத்தைத் தூக்குபவன்
இளந்தாரிக் கற்கள் எல்லாம்
இருவிரலால் நகர்த்திக் காட்டும்
இரும்பனைய தோளுடையோன்
வரம்புகளை மீறுகின்ற
வாலிபத்தின் மிடுக்கோடு
முல்லைக்குத் தேராக
கிள்ளைக்குத் தோளானான்.
காற்றுப் புரவிக்குக்
கடிவாளம் அவளாகிப்
பள்ளிக்கு இடந்தேடி
கள்ளி வளர் காடுவரை
இருள்சூழும் வேளைக்குள
கரைமீது நடந்து சென்றான்
அங்குசக் கூர்கொண்டு
முதுகில் அறைகின்ற
அடித்துக் கனியும் பழமாக
நசிந்து கனிகிறது தனம்.
நால்வகைக் குணத்தாளில்
ஐந்துநில அழகுபார்த்து
ஆறுசுவை உணவையுண்டு
எழுபிறப்பின் பலனையெல்லாம்
எட்டுகின்ற இன்பச் சேற்றில்
நவரசம் கண்டார் இங்கே.
தூரத்தில் தோழி ஆங்கே
வெட்கத்தில் சிவந்து நின்றாள்.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெய்தல் தலைவன்!


சிறு மணல் வீடுகளை
அழித்துச் சிரித்த
அலைகளைத் தின்ற
கடலின் நிசப்தம்.
முகில் வேட்டிக்கு
நிறம் தீட்டிக்களைத்துக்
குணதிசை மேவி
வெள்ளாடை அணிந்து
தீவெட்டி கொழுத்தி
புவியழகு பார்க்கும்
உதயத்துச் சூரியன்.
பன்னீர்க் குடம்
உடைந்த புற்கள்.
பூக்கள் மலரும்
மத்தாப்புச் சத்தம்
காதல் சிற்பங்களின்
கடைசி முத்தம்.

இரவுக்குறி வென்ற
சாமச் குஞ்சுகளில்
கரவுக் கண் எறியும்
வெள்ளைத் தலைகள்.
பறவைகளின் இசைக்குள்
மௌனித்த விலங்குள்.
விழி எழுதும்
முடங்கள் கண்டு
ஊனமுற்ற மொழிகள்.

மெய் சுகத்தில் மொய் எழுதி
ஊடலில் தோற்றவர்
வெல்லுகின்ற வேளையிலே
பொழுது விடிந்ததனால்
கட்டுமேனிக் கரம் விலக்கி
கட்டுமரக் கலமேறி
புள்விழும் திசைபார்த்துக்
கடல் சென்றான் காளை.
கைக்குட்டைத் திருக்கைகள்
கலைத்துவிட்ட குழலழகில்
கக்கிய கணவாய் மை.

வாழை மடல் துடையை
மனத்திற்குள் செருகிவிடும்
பருத்த வாளை மீன்கள்.
காதல் கடிசுமந்த
கழுத்தின் உருவத்தில்
வங்கத்துச் சங்கினங்கள்.
விரல் அனைய முரல்கள்.
இருளுக்கு இருள்பூசிய
நெய்தல் நிலத்தவனின்
உடல் அழகு பார்க்கதத்
திமில் ஏறிப்பாய்கின்ற
அடிக்கடல் மீன்கள்.

பார்க்கின்ற திசையெங்கும்
பாவையவள் முகம்காட்ட
ஊதக்காற்றுக்குள் ஒழித்திருந்து
கதைகள் சொன்னாள்.
மறுமைப் பிறப்பெடுத்தும்
மன்னுவேன் செல்லம் என்று
மார்தட்டி ஊர் சொல்லி
மகிழ்ந்திட்டான் மச்சக்காளை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நெய்தல் தலைவி!


உச்சி வெயிலை
உண்ணும் கடற்கரை;
பிச்சிப் பூக்களின்
வாசம் சுமந்த காற்று;
முகடுவழி விண்நோக்கித்
துள்ளும் மீன்கள்;
கரையேறிப் படம் கீறி
விளையாடும் சிறுநண்டுகள்;
உறு மீன்களுக்காய்த் தவம் கிடந்து
சிறு முரல்களை வரமாய்ப் பெறும்
ஏமாளிக் கொக்குகள்;
ஆம்பல் மரத்துள்
மறையும் அவசரக் குஞ்சுகள்
கலவிச் சோம்பலிற்
களைத்த ஜோடிப்புறாக்கள்;
ஆங்காங்கே அலரிமர நிழலின் மீது
பொடிவைத்துப் பேசுகின்ற
பெண்டிர் கூட்டம்;
கடல்மீது அலைநுரை
பொங்கும் சிரிப்பழகன்;
உடல்மீது இதழால்
உப்புக் கோலமிடும் கலை அரசன் ;

நாண்டு விட்ட பொழுதுகளில்
வஞ்சி இடை மீது
நண்டு விட்டுக்
கொஞ்சும்  நாயகன் - ஆழி
உறவாடும் திசை பார்த்து
நங்கை சென்றாள்.
துருத்தி வழிவந்த
வெப்பம் போல - இங்கு
பருத்தி வெடித்திருக்குப்
பரவைக் காட்டில்;
பனைமரத்து அன்றிலின்
காமக் கூச்சல் - அதை
உள்வாங்கும் உடலுக்குள்
ஏதோ காச்சல்
மட்டில்லா ஆசைகளை
மனதில் தாஙகி
நாணத்தில் சிவந்த
பாவை முகம்;
வலை விரித்தால்
அள்ளிக் கொள்ளும்
சுறாவைப் போல - அவன்
தலை அசைததால்
மையல் கொள்வாள்
இந்த மங்கை.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புலன்விசாரணை!


பருவக் களமாடும்
பவழவல்லிக் கொடியே; உனக்குப்
பார்வைக் குண்டூசிகளைப்
படைத்தவன் எவனோ?
புகல் தந்த உன் இதயத்தால்
என் புலன்களை ஆளும்
உலகத்துப் புதிய அதிசயம் நீ;
சூரியனைத் தூங்கவைத்த
பூமிமங்கை நாணத்தில்
இருளாடை கட்டும் வேளை
எனக்குள்ளே நடக்கிறது
உன் நினைவு தோய்ந்த
புலன்விசாரணைகள்.

நீ புனலாடும் போதெல்லாம்
வெட்கத்தின் நிறம் போக்கி
கங்கை சிவக்கிறது
வள நதியில் இள வயதில்
களவியல் இலக்கணங்கள்
அன்றாடம் படிக்கும்
அரிச்சுவடி மாணவன் நான்.
அனிச்சத்தின் சிரிப்பிற்கு
அர்த்தஙகள் நான் தேடிக்
கணனித் திரையில் காத்திருக்கிறேன்!

உன் படைக்கல வலையத்துள்
நான் அடைக்கலம் ஆனபின்னும்
எனக்கு ஏன் ஆயுள்தண்டனை.
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்-
வள்ளலாக நீ இருந்தும்
வதை செய்யும் தேவதையே! - உன்
மடியில் நான் உறங்க
ஒரு வினாடி போதுமடி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புருசவண்டு


வண்டைத் தேடிய
புது மலர் நான்;
மொட்டவிழ்ந்தவுடன்
கட்டழகைப் பார்த்தவனே
விரல் கொண்டு கதை எழுதி
என் மேனி சுட்டவனே
இதழ்மீது படங்கீறி
உயிருக்குச் சாணை பிடித்தாயே
வெற்றுக் குடத்துள்ளும்
பால் தேடும் பசி உனக்கு
உறிஞ்சிவிட்ட தேனெல்லாம்
ஒரு நெடியில் தீர்த்ததுபோல்
புலருமுன்னே சென்றாயோ
புது மலரை நாடி.
வண்டே நீ வாழ்ந்துவிடு
போதை தலைக்கேறி
நாளெல்லாம் போதாகி
மாலை மடிகின்றேன்.
நீ கூதி மனை சென்று
குளித்துவிட்டு வந்தாலும்
நாளையும் மலந்த்திடுவேன்
என் புருச வண்டே..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தலைவன் ஆற்றாமை.


காத்திருந்த கண்ணுக்குள்
பூத்திருந்த புது மலரே
நேற்று வந்த செய்தி ஒன்று
நெருப்பாகக் குத்துதடி
இடுப்பொடியத் தாலிகட்டி
இளம் சிவப்பில் பட்டுடுத்தி
சேர்ந்து படம்  பார்க்கச்
சிலநாளாய் ஆசையடி
கொல்லைப் புறம் வந்து
கொடுத்ததெல்லாம் நீ மறந்து
அல் வந்து எனையாழும்
செல்விருந்துத் தேவதையே
தொல்லை உனக்கென்று
தொலைதுர்ரம் சென்றாயோ
முல்லைக் கொடி நான் என்று
பாரி எந்தன் தேர் கேட்டாய்
கள்ழொழுகும் சிரிப்பில்
என் மெய் ஒழுக முத்தமிட்டு
மை ஒழுகும் கண்ணாளே
நீ மறைந்த மாயம் என்ன.
ஆத்தோரம் நீ நடந்து
அசலூர்க் காரனுடன்
சென்றுவிட்ட செய்தி கேட்டேன்
செத்தாலும் பதில் எழுது.
ஊராரின் பேச்சை
உமி அளவும் நம்பவில்லை
தேரோடு நிற்கின்றேன்
என் திருவிளக்கே வந்துவிடு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

களவியல்.

















காதலெனும் கணவாய்வழி
இதயம் புகுந்த புதிய தேசம் நீ
பல்லவி இழந்த சரணங்களாய் நான்;
இரவைக் குழைத்து அப்பிவைத்த
உன் கூந்தல் வெளிச்ச இருட்டில்
நட்சத்திரங்களைத் தேடுகின்றேன்.
உறவாய் வந்த என் இரத்தத் தாமரையே
உன் வரவுகள் தந்த சிறகால்
உயரங்கள் சிறுமை கொண்டன.
நிலவைத் தொலைத்த வானம்
பூமியில் உன் முகம் கண்டு மகிழ்ந்தது.
பசலை பூத்த உன் பரிச மேனி
விதைத்த வளையல்கள்  வழிபார்த்து
கருக்கலுக்குள் வந்திடுவேன்
கண்மணியே காத்திரடி.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS