RSS

Showing posts with label personal. Show all posts
Showing posts with label personal. Show all posts

கோவையில் ஒரு யாகசாலை.


பேராசிரியர் மணிவண்ணன்


கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண்டாம், கேளிக்கை விமர்சனங்களை கேட்டு தங்களை (கோபத்தால்) இழக்கவும் வேண்டாம். கங்கைக்கு பேதமில்லை, தன்னில் மூழ்குவன் பாவி ஆனாலும் பேதமின்றி அவனைத் தன் இருகரத்தால் அணைத்து பாவத்தைப் போக்குவதால்தான் கங்கை ஜீவ நதி, புண்ணிய புனித நதி என்று அழைகப்படுன்கிறது"  இது எனது "ஆத்மலயம்" நூலுக்காக ஒரு வாசகியின் மடல். 


இந்த நூல் வெளியீட்டிற்காகவும்; அதற்குக்கிடைக்கும் மெடலை வாங்குவதற்காகவுமே நான் பயணித்துக்கொண்டு இருக்கின்றேன். பயணத்தின்போதெல்லாம் சச்சீன் அடிக்கும் சதங்கள்போல் தகிதா பதிப்பகம் அடித்த சதங்களில் ஒன்றுதான் உங்கள் "ஆத்மலயம்" என்று மணிவண்ணன் எனக்கு அடிக்கடி கூறுவதுதான் என் நினைவிற்கு வருகின்றது.






தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியில் திரு. திருமதி பாபா இருவரும் முகநூல் நண்பர்களாகி எனக்கு அலுவா கொடுப்பதற்காகத் தங்கள் இல்லத்திற்கு அழைத்திருந்தார்கள். விருந்தோம்பல் பண்பை அவர்களிடம் நான் பார்த்தேன். திருவள்ளுவர்கூட திருநெல்வேலி மக்களைப் பார்த்துத்தான் விருந்தோம்பல் என்ற அதிகாரத்தை ஆக்கினாரோ என்று எண்ணத் தோன்றியது.                                                                                                             அவர்களுக்கு இரண்டு புதல்வர்கள்.  புதல்வர்கள் இருவரும் எனது அறையிலேயே தூங்கி தங்கள் அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். அவர்களது குசினிக்குள்சென்று நானே அலுவா எடுத்துச் சாப்பிடும் அளவிற்கு குடும்ப உறவினராகி விட்டேன்.  திரு பாபா அவர்கள் பார்ப்பதற்கு ஒரு கவர்ச்சி வில்லனின் தோற்றம். ஆனால் விபரம் தெரிந்த, நான் சந்தித்த நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.  திருவள்ளுவர் சிலையை அவருடன் சென்று பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  திருமதி பாபா அவர்கள் தனது பல்கலைக்கழகத்திற்கு என்னை அழைத்துச் சென்று தனது பேராசிரியர்களுடன் உரையாட ஏற்பாடு செய்தது மட்டுமன்றி "ஞானவாணி" என்ற வானொலிக்காகவும் என்னைப் பேட்டிகாண வைத்தார்.  இத்தனைக்கும் நான் அவர்களுக்குச் செய்தது வெறும் "நன்றி" என்ற வார்த்தை மட்டும் தான். எனது பயணத்தின் "கிளைமாக்ச்" க்காக நான் கோவை பயணமாகும் பேரூந்து நிலையம்வரை குடும்பத்துடன் அனைவரும் வந்து குதூகலமாக என்னை அனுப்பிவைத்தனர். இராமர் காட்டிற்குப் போகும்போது அவரை வழியனுப்பி வைத்தவர்களே மிகவும் கலங்கினார்கள் என்ற ஒரு வரியை எங்கேயோ வாசித்த ஞாபகம் அவர்களது முகங்களைப் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்டது. 



வண்டி கோவையை நோக்கிப் புறப்பட்டது. சொந்தக்களைத் தொலைத்த ஒரு அகதிபோல் குளிரூட்டப்பட்ட சொகுசு வண்டிக்குள் இருந்தேன். தொலைதூரத்தில் இருந்து எனக்கு ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. "என்னங்க! எங்கு இருக்கிறீர்கள்; எனக்குப்பிடித்த மெட்டிச் சத்தத்திற்கு சொந்தக்காரி அவதான். எல்லாவற்றிற்கும் பதில் கூறினேன். சத்தம்போட்டு எதையும் சொல்ல முடியவில்லை. அப்போது வானத்தைப் பார்த்தேன். முகிலுக்குள் மறைந்திருந்த முழுநிலவு தன் முகத்தை முழுதாகக் காட்டியது. என் மனைவியின் முகம் இந்த நிலவுக்குள் நிழலாக இருந்தது. என் வளர்ச்சிக்காகவே என்றும் என்பின் நிற்பவர்.  பிரிவுத்துயர் ஆற்றமுடியாத முல்லைநிலத்துத் தலைவி போல் தொலைபேசிக்குள் தன் உணர்வுகளைத் தூதாக்கினாள். 

இறுதியாக "என்னங்க! யன்னலுக்குப் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி திறக்கவேண்டாம்; வைரஸ் பிடித்து விடும்" என்று கூறி தொலைபேசியை முடித்தார்.  நான் புறநாநூற்றில் பதில் சொல்லி என் நெடுநெல்வாடையின் அகநாநூறு ஆகிவிட்டேன்.  வண்டியின் யன்னல் பக்கத்தில் "கரம் சிரம் புரம் நீட்டாதீர்கள்"என்று எழுதப்பட்டிருந்தது. இது டி. ராயேந்தரின் தம்பி அடுக்கு மொழியில் எழுதினாரோ என்று நினைத்துக் கொண்டேன். இதில் புறம் என்பதற்குப் பதிலாக புரம் என்று போட்டிருந்தார்கள். 

ஓட்டுனருக்குப் பின்பக்கத்தில் இரண்டு பெண்கள் இருந்தார்கள். வளைவுகளில் எல்லாம் வண்டியின் அமைதியான ஓட்டத்திற்கு இந்தப் பெண்களைப் பார்த்த சாரதியின் பகுத்தறிவே காரணமாக இருக்கலாம். வண்டிக்குள் ஆடுகளம் என்ற படம் சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. வண்டி தரிப்புகளில் நின்று கிளம்பும்போதெல்லாம் படமும் ஒவ்வோருமுறையும் எழுத்தோட்டத்தில்இருந்து ஆரம்பித்தது. பிரயாணிகளில் ஒருவர் பொறுமை இழந்தவராக "என்ன படம் ஓட்டுகிறீர்கள்" என்று கொஞ்சம் கடுப்பாகக் கேட்டார். "அது தொழில் நுட்பக்கோளாறு" என்று ஒரு விமானியின் பாணியில் சாரதி பதில் சொன்னார். பக்கத்தில் இருந்தவருக்கு நான் தொலைபேசி கதைப்பது தொல்லையாக இருந்தது என்பதைத் தன் செய்கைகள் மூலம் எனக்குவிளங்கவைத்தார். மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு. "ஐயா நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்? உங்களை வரவேற்கக் கோவை காந்திபுர பேரூந்துத் தரிப்பிற்கு காலையில் வருகிறேன். நான் மணிவண்ணன் சாரின் மாணவன்; எனதுபெயர் வைரs" என்று குறிப்பிட்டார். நான் பிரயாணம் செய்த வண்டிக்குள்ளேயே ஒரு நல்ல வைரs தொற்றிக்கொண்டதை உணர்ந்தேன். பேராசிரியர் மணிவண்ணனைச் சந்திக்கப்போகிறேன் என்ற இயமக் கனவுகளுடன் இருந்த என்னை இதமாகவந்து ஒருத்தி அணைத்தாள். வெளிச்சத்தில் தன்னைக் காட்டிக்கொள்ளத் தயங்கிய அந்த நித்திராதேவி காலை 5.30 மணியளவில் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். வண்டி காந்திபுரத்தை அடைந்ததும் எல்லோரும் இறங்கினார்கள். எனக்குப் பக்கத்தில் இருந்தவரை ஓட்டுனர் எழுப்பி இறக்கிவிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார் சுற்றத்தார் எவரையும் காணவில்லை. tower பிரச்சனையால் தொலைபேசிகதைத்தது விளங்கவில்லை. பலமைல்கள் தள்ளிவந்து இறங்கிவட்டதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கு சிரிப்பு வந்தது. சிரித்தால் அவர் கடுப்பாகிவிடுவார் என்று அடக்கிவாசித்துவிட்டு நகர்ந்துவிட்டேன். 

என்முன்னால் ஒரு டீ கடை. அதில் ரூபாவுக்கு இரண்டு என்று வாழைப்பழக்குலையில் எழுதியிருந்தார்கள். இங்கு தான் செந்தில் பழம் வாங்கி கவுண்டமணிக்குக் கொடுத்தாரோ என்று நினைத்துவிட்டுத் தேனீர் ஒன்றை அருந்திவிட்டு vairas இன் வருகைக்காகக் காத்திருந்தேன். பல ஆட்டோ ஓட்டுனர்கள் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் செல்வதுபோல் வந்து வந்து பேட்டி எடுத்தார்கள்.

 பல மீட்டர்களுக்கு அப்பால் என்னை வரவேற்க வந்த கவிஞர் vairas என்னைக்கண்டு மகிழ்ச்சிபொங்க புன்முறுவல்பூத்த முகத்தடன் கட்டித்தழுவி வரவேற்றார். கோவையில் முதல் சந்தித்த தமிழர் கவிஞர் vairas அவகள்தான். அமைதியான பேச்சு; ஆழமான கருத்துக்கள்; வட்டமான கண்கள்; கூர்மையான பார்வை. கவிஞர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களோ என்ற ஒரு கேள்வியுடன் மணிவண்ணன் ஒழுங்கு செய்திருந்த விடுதியை அடைந்தோம். அழகிய உல்லாச விடுதியில் எனக்கென்று ஒரு குளிரூட்டப்பட்ட சொகுசு அறையை ஒழுங்கு செய்திருந்தார்கள். கவிஞர் vairas அவர்கள் மாலைவரை என்னுடன் தங்கியிருந்தார். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்கள் ஆற்றும் தொண்டு என்னை மிகவும் ஆச்சரியப்படவைத்தது. அன்று மாலை மணிவண்ணன்  அவர்கள் என்னைவந்து சந்திப்பதற்கிடையில் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காப்பி; காலை உணவு; மதிய உணவு; உபசரிப்பு; போன்ற விருந்தோம்பல்களில் ஏதாவது குறை இருக்கின்றதா? எல்லாம் தங்கள் மனத்திற்குச் சௌகரியமாக இருக்கின்றதா என்பதைக் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் வரும்வரை நான் துர்ங்காமலே இருக்கின்றேன். வானொலியில் பக்கத்து அறையில் "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற பாடல் பெரிதாகக் கேட்டுக்கொண்டு இருந்தது. (தொடரும்)

கவிஞர் vairas

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

8.மனைவிக்கு முத்தம் !


எறும்பு ஊரும் கோட்டிலும், பாம்பு ஊரும் தடயத்திலும் பல சொற்கள் என்னால் இன்னும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன

வாழக்கை விதி என்ற கோட்டில்தான் பயணம் செய்கின்றது. கோடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டுகின்றபோது மனித சந்திப்புகள் இடம்பெறுகின்றன. வாழ்த்துக்கள்.

இந்தத் தியறியின்படி நானும் திருமணம் செய்துவிட்டேன். வேலைக்களைப்பு, நாய்களின் சிறுநீர்கள் சுவிஸ் தெருக்களில் குச்சுக்குச்சாகக் கிடந்தன. அவளவுக்கு உறைபனி வெப்பநிலை. மூச்சில் வரும் நீராவியை மீசைகள் snow வாக கருக்கட்டியிருந்தன. இரவுவேலை முடித்து அதிகாலையில் வீடு சென்று படுத்துவிட்டேன். ஒரு கிலோ பாண்வாங்க 25 கிலோ உடுப்பு அணியும் வின்ரர் காலம்.

வீட்டில் ஒரு முழு ரிக்கட்டும், இரண்டு Hகாவ் ரிக்கட்டுகளும் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து ஆரவாரம்.  பெரியவனும் சின்னவனும் ஏதோ கதைக்கிறார்கள்; அது எனக்கு கேட்கிறது. உன்னிடம் இருக்கும் துப்பாக்கியில் 6 மருந்து இருக்கிறது என்று பெரியவன் சொல்கிறான். முதலில் அப்பாவை சுடு என்றான். சின்னவன் டிசூம் என்று சுட்டான், பின்னர் அம்மாவை சுடு என்றான் சின்னவன் டிசூம் என்று சுட்டான். பின்னர் பெரியவன் தன்னை சுடு என்றான்; சின்னவன் டிசூஉம்.பெரிதாகச் சத்தம் போட்டு சுட்டான். ஏன் என்னைச் சுடுமபோது பெரிதாகச் சத்தம் போட்டாய் என்றான் தம்பியை  ''நான் உன்னை சுடும்போது ''சைலன்சர்'' போடாமல் இழுத்தேன்'' என்றான் தம்பி.
பெரியவன் அப்பாவையும், அம்மாவையும், என்னையும் சுட்டு 3 மருந்து போய்விட்டது. இப்போ உன்னிடம் எத்தனை மருந்து இருக்கிறது என்று கேட்டான். தம்பி 3 என்றான். பெரியவன் அப்போ ஆறிலிருந்து மூன்று போனால் 3 என்று பெரியவன் தம்பிக்கு கழித்தல் கணக்கு சொல்லிக் கொடுப்பது புரிந்தது. இதற்கிடையில் மனைவி தொலைபேசியில் ஒரு உரையாடல். இடையிடையே ''நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன'' கற்பூரவாசனை தெரியாததுகளுக்குச் சொல்லியும் திருத்த இயலாது என்பதும் காதில் கேட்டது. இடையிடையெ சிரிப்பு. யாருடன் ஊரையாடல் நடைபெறுகின்றது என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் முயற்சிக்கவும் இல்லை. கடைசியில் ''நித்திரை கொள்பவனை எழுப்பலாம், நித்திரைபோல் கிடப்பவனை எழுப்பமுடியாது என்று கதை முடிக்கப்பட்டது.

மீண்டும் கணக்குப்பாடம். இப்பவும் கழித்தல் கணக்குத்தான். பெரியவன் ''உன்னிடம் இப்போ 3 மருந்து இருக்கிறது. நீ இனி உன்சைச்சுடு என்றான். சின்னவன் முடியாது, என்னை நான் சுடமாட்டன் என்றான். பெரியவன் என்னை சுட்டனீதானே உன்னையும் சுடு  என்றான்.  இல்லை, மாட்டன் மாட்டன் என்றான் தம்பி. கணக்குபாட்ம் நின்றது. இருவருக்கும் உள்வீட்டுக்குள் சண்டை. மனைவி வந்தார். பிள்ளையள் அப்பா நித்திரையாகக் கிடக்கிறார் அங்காலே போய்விளையாடுங்கள் என்று புருசன் மேலுள்ள கருணையைக் காட்டிகார். நானும் அப்படித்தான் நினைத்தன். மறுகணம் என் அறையில் கிடந்த தையல்மெசினில் மனிசி சட்டை தைக்கத் தொடங்கினார். மீண்டும் தொலைபேசி என் அறைக்குள்தான். மனைவி எடுத்தார்.'' ஓம் ஓம் அவர் இப்பதான் வேலையால்வந்து நல்ல நித்திரை, எழுப்பினால் ஏசுவார், பிறகு எடுங்கள் என்று வைத்துவிட்டு தையல் தொடர்கிறது. கற்புள்ள தையல்மெசின். ஆண்களின் கைகள் இன்னும் படவில்லை. பட்டிருந்தால் எப்பவோ செத்திருக்கும்.


தூக்கத்திலும் சிலரது கதைகள் என்னை விட்டபாடில்லை. ''நான் நினைத்தன் மச்சான் வைரமுத்து ''எலிசபத்து ரைலர் மகளா? என்று பாடல் எழுதியது எலிசபத் ராணியின் ரெய்லர் அதாவது தையல்காரனின் மகளாக்கும் என்று, இப்பதான் விளங்கியது எலிசபெத்ரைலர் என்ற நடிகையின் மகளா? என்று எழுதியது. மற்றவன் ''உனக்கு என்ன தெரியும் தெருவில் விளம்பரத்திற்கு இலவசமாகக் கொடுத்த allways ஐயே என்ன சாமான் என்று தெரியாமல் வாங்கிவந்தனீதானே'' நான் கன்ரீனில் நுளையும்போது இவை என் காதில் கேட்டவை.

என்னைக்கண்டு ஒருவர் ஓடிவந்தார் ''அண்ணேண நீங்கதானே இந்த முகநூலில் நிலைக்கண்ணாடி எழுதி பெயர்வாங்கிறனீங்க, இந்த பாரிசில் நடக்கும் தமிழர் அடாவடித்தனங்களையும் எழுததலாம் தானே'' என்றார். சரி நீங்கள் என்னத்தைக் கருதுகிறீர்கள் என்று அமைதியாகக் கேட்டேன். ''இல்லை அண்ணே! பாரிசில் லாச்சப்பல் என்ற தமிழர் வியாபார ஏரியாவில்; தமிழர்களைத் தமிழர்கள் வெட்டுகிறார்கள், கொலை செய்கிறார்கள், தமிழர் கடைகளுக்குள் தமிழர்கள் சென்று கொள்ளை அடிக்கிறார்கள், வீடுகளுக்குள் சென்று பெண்களைக் கற்பழிக்கிறார்கள், கடைகளை இழுத்துப் பூட்டிவிட்டு முதலாளிமார் பயத்தில் ஓடுகின்றார்கள், 14 வயதுப் பெண்ணைப் பலவந்தப்படுத்தி வல்லுறவு கொண்டபின் கொல்கிறார்கள், லாச்சப்பலில் பெண்கள் கடைத்தெருவிற்கு வரமுடியாமல் இருக்கின்றது, நாகரிகத்திற்குப் பெயர்போன பாரிஸ் தெருக்களில் தமிழர் அநாகரிகமான நடந்து கொள்கின்றார்கள், இதைத் தெரியாமல் தமிழர்கள் உலகத்தில் கொடிகட்டிப் பறக்கின்றார்கள் என்று சிலர் சொல்கிறார்கள், இவற்றை எழுதலாம் தானே அண்ணே'' என்றார். தம்பி நான் உயிருடன் இருந்து இரண்டு நிலைக்கண்ணாடி எழுதுவது உமக்கு விருப்பம் இல்லையோ  ஆளை விடுங்க சாமி என்றுவிட்டு  நகர்ந்துவிட்டன்.


வீட்டின் அமைதி என்னைத் தூங்கவிடவில்லை எழுந்துவிட்டேன். வீடு நிசப்தமாக இருந்தது. ஒருவரையும் காணவில்லை. எங்கள் அறிவிப்புப் பலகையில் அதுதான் சாப்பாட்டு மேசை. அதில் ஒரு துண்டு இருந்தது. வாசித்துப் பார்த்தேன். ''நாங்கள் கடைகளுக்குச் செல்கின்றோம், மதியம் வெளியில்தான் சாப்பிடுவோம், நீங்கள் எங்களைத் தேடினாலும் என்பதற்காக உங்கள் தொலைபேசியையும் கொண்டு செல்கின்றோம், சின்னவனுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்குவதற்காக உங்கள் கிறடிற்காட்டையும் கொண்டு செல்கின்றோம், மதியம் ஏதாவது பார்த்து சாப்பிடவும். இப்படிக்கு உங்கள் மனைவி பிள்ளைகள் என்று போட்டிருக்கும் என்று நீங்கள் நினைப்பதுபோல் நானும் நினைத்தேன். ஒன்றும் போடவில்லை
.
குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தேன், ஒருமுட்டை, 2 கரட், பாதி பூசனிக்காய், கொஞ்ச லீக்ஸ். யாராவது எனக்குத் தெரியாமல் முயல்வளர்க்கிறார்களோ என்று யோசித்தன். வெளியில் பார்த்தேன் காரையும் காணவில்லை. இப்போதுதான் நான்உண்மையில் அகதித்தமிழன் என்பதை மறுபடியும் உணர்கிறன். மீண்டும் வெளியில் சின்னவனின் ஆரவாரம் கேட்கிறது. விளையாட்டுப்பொருள் அவனுக்குக் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வருகிறான். மீண்டும் வெளியில் எட்டிப் பார்க்கின்றேன். மனைவிக்கு ஒருவன் முத்தம் கொடுத்துக்கொண்டு நின்றான். என் மனைவிக்கு அல்ல தன் மனைவிக்கு.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS