RSS

Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

ஒரு தபால்காரன்.



பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். அது ஒரு வெள்ளைக்கார வீடு. அங்கு ஒருதாய்; ஒரு தகப்பன்; 3 பிள்ளைகள்; ஒரு நாய் போன்ற உயிர்கள் வாழும் சிறிய வீடு. இடைக்கிடை இசை வாத்தியங்கள்.  பின்னர் வெளியில் நின்று சிகரட் பிடிப்பவர்களின் புகை வாசம்.  நான் பாடசாலையிக்குப் பக்கத்தில் நிற்பது போல் ஒரு சத்தம்.  உலகத்தில் பல நாட்டுப் பாடசாலைகளுக்குப் பக்கத்தில் நான் நின்று கேட்டிருக்கிறேன் எல்லா இடத்திலும் ஒரே சத்தம் தான். மொழி அதற்கு ஒரு தடை இல்லை.  பின்னர் பல்கலைக்கழக நூல் நிலையத்தில் தோன்றுவதுபோல் ஒரு மயான அமைதி அந்த வீட்டில். மழை நீரில் குமிழி விழுந்து வெடிப்பது போல் பல சத்தங்கள். எனக்கு வெளியில் சென்று வந்த களைப்பு. அதைவிட மீசையில் பனி உறையும் குளிர் வேறு. ஒரு கிலோ சீனிவாங்கப் போவதற்கு 25 கிலோ உடையணியும் கடும் வின்ரர். தொலைக்காட்சியைத் தட்டிப் பார்த்தேன். vijai தொலைகாட்சியில் கள்ளச் சாமிகளைப்பற்றி ஒரு தொடர். கலைஞர் தொலைக்காட்சியைப் பார்த்தேன். அதில் அடுத்த பிரபுதேவா யார் என்ற ஒரு போட்டி நடனம். தீபம் தொலைக்காட்சியை தட்டினேன். அதில் ராசிபலன் பற்றி ஒருவர் எல்லா ராசிகளுக்கும் பலன் சொல்லிக்கொண்டிருந்தார். அது எனக்குக் கொஞ்சம் பிடித்திருந்தது. எனது ராசிபலனைப் பார்ப்பதற்காக உட்காந்தேன்.  பலன் சொல்பவர் இப்போது இடப ராசியில் நிற்கிறார். நான் கடைசி மீனராசி. மீனராசியில் பிறப்பவர்களுக்கு இது கடைசிப் பிறப்பு என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன்.  அதுவரை பொறுத்திருக்க வேண்டும்.  பொறுத்துப் பார்ப்பதாக முடிவு எடுத்துவிட்டேன். 30 நிமிடம் சென்றுவிட்டது. அதற்கிடையில் 9 விளம்பரம் வந்து போய்விட்டது.  2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மலிவு விற்பனை விளம்பரமும் அதில் வந்து போனது.  ராசி பலன் சொல்பவர் துலாம் ராசிக்கு பலன் சொன்னதும் மீதி பலன்கள் மறுநாள் இதேநேரம் ஒளிபரப்பப்படும் என்ற அறிவித்தலுடன் காட்சி மாறியது. மாதாமாதம் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குக் கட்டும் பணத்தின் கணக்கை மட்டும் மனதிற்குள் பார்த்துவிட்டு; பக்கத்துவீட்டு சத்தங்களே பரவாயில்லை என்பதுபோல் இருந்தது.  எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்கள் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு வருகிறார்கள். பெண்களை மட்டும் ஏன் 16 முழ சேலை கட்டச்சொல்லி நிர்வாகிகள் பணிக்கிறார்கள்.  இது சம்பந்தமாக ஒரு ஐரோப்பாவில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கதைத்துபோது "வேட்டி சட்டை சால்வையில் வந்தால் நாட்டான்; காட்டான் மாதிரி இருக்கும் என்று பதில் அளித்தார். அப்போ பெண்கள் நாட்டுக் கட்டைகளோ என்று கேட்டேன்.  "உங்களைமாதிரி அரைவேக்காடுகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை" என்று விட்டு தொலைபேசியைத் தானாகத் துண்டித்துவிட்டார்.  இவர்தான் ஒருமுறை சிறுவருக்கான தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் "கிளி" க்கு "ளி" என்ற எழுத்தா "ழி" என்ற எழுத்தா வரும் என்று கேட்க; இரண்டில் நீங்கள் எது வேண்டும் என்றாலும் போடலாம் என்று பதில் அளித்துவர். 

இப்போது பக்கத்து வீட்டில் ஒரு சத்தமும் இல்லை. ஒரு புல்லாங்குழல் இசைமட்டும் இதமாக வந்து கொண்டிருந்தது. ஒரு மூங்கில் மரத்தை முழுதாகச் சாப்பிடும் அளவு நேரம் இசை ஒலித்தது. அதில் மக்கல் யக்சனின்; விட்னிகூsடன்; ரினாரேணர்; யெனிபர்றs; லயணல்றிச்; மடோனா; சப்றீனா சமந்தாபொக்s,  போன்றவர்களின் ஆங்கிலப் பாடல்களை ஒருவர் வாசித்துக்கொண்டிருந்தார். நானும் புல்லாங்குழல் பழகினால் என்ன என்ற உத்வேகம் எனக்கு வந்தது. விடிந்ததும் பக்கத்து வீட்டு பெரிய மகன் வெளியில் தகப்பனின் காரில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றிக்கொண்டிருந்தான். நானும் எனது காரில் உறைந்தபனிப் படலங்களை அதற்குறிய கருவிகளால் அகற்றிக்கொண்டு இருந்தேன். தெருவெலலாம பனியால் மூடப்பட்டிருந்தது. அதில்தான் எனது பயணம் தொடங்கப்போகிறது. "பனி படர்ந்த பாதையில் பயணம் ஏது" என்று பாடிய கண்ணதாசனையும் அழைத்துச் செல்லவேண்டும்போல் எனக்கு ஆசையாக இருந்தது.
இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நிற்கிறோம் .  அவன் ஒன்றும் கதைப்பதாக இல்லை. சூரியனை நல்ல விலைக்கு விற்று விட்டதுபோல் பூமியில் காலை 9 மணியாகியும் வெளிச்சம் வரவில்லை.  டென்மார்க் என்பதை "இருள்சூழ்ந்த பனிநாடு" என்று வெள்ளைக்காரர் பெருமையாகச் சொல்வார்கள். நானே அவனிடம் சென்று இரவு நீ நன்றாகப் குல்லாங்குழல் வாசித்தாய் அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன் என்றேன்.  வெள்ளைகள் சிரித்தால் கடைக்கண் கன்னங்கள் சுருங்கும். அப்படி இவனும் சிரித்தான். எனக்கு ஏன் சிரிக்கிறான் என்று விளங்கவில்லை. பாசையைப் பிழையாகக் கதைத்ததாக நான் நினைத்தேன். அவன் கூறினான். அது நான் வாசிக்கவில்லை. ஒரு தமிழ் இந்திய புல்லாங்குழல் வித்துவான் ஆங்கிலப் பாடல்களை புல்லாங்குழலில் அமரிக்காவில் வாசித்த வீடியோவைப் பார்த்தேன் என்று பதில் கூறினான். எனக்கு இடத்தைக் காலிபண்ண வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் பனிதட்டி முடியவில்லை. அவனது தாயார் இன்னும் தட்டி முடியவில்லையா? வேலைக்கு நேரமாகிறது என்ற ஒலியுடன் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.   இவன் கிளம்பும்போது தாயார் பத்திக்கொண்டிருந்த அரைவாசிச் சிகரட்டை வாங்கிப் பத்திக்கொண்டு வாகனத்தை start பண்ணினான். உங்கள் மகன் எங்கு வேலை செய்கிறார் என்று கேட்டேன். அவள் "இவர் எனது மகன் இல்லை; எனது புதிய புருசனின் மகன்" என்றாள். நான் விளங்கிக்கொண்டேன்.  தபால் அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் குறிப்பிட்டாள். 

தபால் அலுவுலகம் என்றதும் எனக்கும் ஒரு அனுபவம் உண்டு . சாதாரண 10ம் தரம் படித்துவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் காலத்தில்-. எனக்கு 17 வயது இருக்கும். கிராமத்து தபாலகத்தில் தந்தி கொடுக்கும் வேலை கிடைத்தது.  இப்படியே வேலை செய்து செய்து post master ஆகிவிடலாம் என்று நினைத்தன். நாள் முழுவதும் அலுவலகத்தில் இருந்தேன். ஒரு தந்தியும் வரவில்லை.  post master க்கு கடைக்குப்போய் சாமான் வாங்கி கொடுத்ததும்; இன்னுமொருவருக்கு மதிய சாப்பாடு அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து கொடுத்ததும் தான் மாலை 4 மணிவரை பார்த்து வேலை. ஆபீசு முடியும் தரவாயில் ஒரு தந்திவந்தது. எங்கள் கிராமத்தில் ஆதிகாலத்தவர் முத்துக்கள் குளித்தனராம். இப்போ அதே பரம்பரை சங்கு குளிக்கிறது. (கடலில் சங்கு எடுத்துல்) அப்படி சங்கு குளிக்கச் சென்றவர் ஒரு வலமபுரிச்சங்கொன்றை எடுத்துவிட்டார். அது மிகவும் பெறுமதிகூடியது. அநத மகிழ்ச்சியை வீட்டுக்கு தந்தி மூலம் தெரிவிக்கிறார். குறிப்பிட்ட விலாசத்திற்கு கொண்டு செல்கிறன். என்னைக் கண்டதும் தந்தி என்றேன். சங்கு குளிக்கச் செசன்றவர் ஒருவர் கடலோடு போய் விட்டார் என்பதுதான் தந்தி என்று நினைத்து சிலர் அழத் தொடங்கி விட்டார்கள். குறிப்பிட்ட நபரக்கு தந்தியை கொடுத்தேன். உடைதது வாசிக்கச் சொன்னார். அவரது மகன் தங்கராசா வலம்புரிச்சங்கை எடுத்திருப்பதாக வாசித்து காட்டினன். மிகவும் மகிழ்நதார்கள். என்னை கட்டி தழுவினார்கள். "தம்பிக்கு ஒரு 5 ரூபா கொடுத்து விடடி என்று தன் மனைவியையும் அதட்டினார். நான் வேண்டாம் என்றேன். தம்பி அப்பசரி நாளை நல்ல மீன் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுக்கிறேன் என்று சொன்னார்.  மிகவும் பாராட்டி வழியில் அரைவாசி தூரம்வரை வந்து சந்தோசம் அடைந்தார்கள். கடமையைச் செய்த சந்தோசம் எனக்கும் ஏற்பட்டது. 

மறுநாள் நான் வேலைக்குச் சென்றேன். அதிகாலையிலேயே அதே விலாசத்திற்கு ஒரு தநதி ஒட்டப்பட்டு இருந்தது. கொண்டு சென்றேன். மக்கள் அயலவர் குவிந்து விட்டார்கள். யார் வலம்பரிச்சங்கு எடுத்தார்கள் என்று அறிய அவா. தங்கராசாவின் தாயாரும் நின்றார். தந்தியை உடைத்தேன். "தங்கராசா மரணம்; பந்தல் போடவும் மாலைக்குள் கொண்டு வருகிறோம் என்று இருந்தது. 

என்னைச் சுற்றி ஒரு மரண ஓலம். நேற்று என்னை வாழ்த்திய அதே ஆட்கள் "பாழ்பட்டுப் போடுவான் விடிய விடிய வந்தானே; பிள்ளையை கொல்லிப் போட்ட அறிவித்தலோட வந்தானே; நீயும் ஒரு தாய் பெத்து பிள்ளைதானே; நீ உருப்படுவாயா" என்றெல்லாம் திட்டினார்கள்.  எனக்கும் கவலை வந்தது. நான் என் கடமையைச் செய்தேன்.  பலன் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை என்ற துணிவு எனக்கு ஏற்பட்டது.  ஆனால் நான் சாதாரண ஒரு தபாற்காரனாக என் கடமையைத்தான் செய்தேன். இந்தத் தத்துவத்தையே கீதையில் கண்ணன் அருச்சுனனுக்கும் உபதேசம் செய்கின்றார். கடமையைச் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள். நம்மில் சிலர் பலனை எதிர்பாராதே என்பதை அதனால் வரும் இலாபம் என்று பிழையாக விளங்கிவிடுகிறார்கள். பனி தட்டிய என் கார் பிரதான தெருவை அடைந்தது. எனக்கு முதல் வெளிக்கிட்ட பக்கத்து வீட்டு பொடியன் பனியில் சில்லு வழுக்கி ஒரு மரத்துடன் மோதியபடி அவரது கார் நின்றதைக் கண்டேன். எனக்கு அடுத்த மரம் தயாராக இருப்பதுபோல் தெரிந்தது. கவனமாக ஓடுகிறேன். மரம் கழிந்துவிட்டது. இனி நேர் பாதைதான். சென்று வருகிறேன். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மந்திரப் புன்னகை!


"அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" இது என் கணனிக்கு வந்த மின்னஞ்சல்.  இதை வாசிக்கும் போது ஒரு சாத்தான் எனக்கு வேதம் ஓதியதுபோல் இருந்தது. மனத்தில் சபலம் வந்ததும் சாபம் போடத் தோன்றும். சலனம் வந்ததும் சமாளிக்கத் தோன்றும். சந்தேகம் வந்ததும் கொலைசெய்யத் தோன்றும். எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. என்னை; மற்றவர்கள் இவர் என்ன புடம் போட்ட தங்கமா என்று உரசிப் பார்ததவர்களுக்கு அப்படித் தோன்றியது. அது அவர்களது 5ம் அறிவு. எனது அம்மா என்னை டாக்டருக்கு படிப்பிக்க எண்ணியிருந்த காலத்தில் சத்திர கிசிச்சை என்ற சொல் எனக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காத மனதின் பிரதிபலிப்பு அது. ஆமிக்காரர்களை வீதியில் காணும் போது இவர்கள் தான் மக்களைச் சித்திரவதை செய்பவர்கள் என்ற எண்ணம் என்னைப் பலமுறை சித்திரவதை செய்திருக்கிறது. "டோபி" யைக் கண்டால் கூட அவர் வெளுத்து விடுவார் என்ற பயம் எனக்கு! பூக்கள் பறிக்க கோடாரி எடுப்பவர்களை நான் கொலைகாரர்களாகப் பார்க்கிறேன். எனது பார்வையில் பூக்களில் இரத்தமும் பூமியில் யுத்தமும் இந்த பிரபஞ்சத்தை விட்டு அகல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அல்லாத பட்சத்தில் நானே பூமியைத் தள்ளிவைத்து வாழப்பழகி விடுவேன்.


மகாபாரதப் போரில் பெருவாரியான போர் வீரர்கள், வித்தியாசம் தெரியாமல் தங்களுக்குத் தாங்களே அடிபட்டுச் செத்தார்கள். இதைத் தடுப்பதற்க்காக ஒரு வழி செய்தார்கள். ஒரு சாரார் மட்டும் நெற்றியில் பட்டை தரித்துக் கொண்டார்கள். ஆனால் மறுசாரார் எதிரியிடம் இருந்து தப்புவதற்காக அவர்களும் பட்டை தரித்துக் கொண்டார்கள். மறுபடியும் போர்க்களத்தில் அதே நிலைமை தான். இறுதியில் பிணக் குவியலின் மேல் ஒரு சாராரின் வெற்றிக் கொடி அழுது அழுது காற்றில் பறக்கும்.  திரௌபதயை பத்தினியாக வர்ணித்த பாண்டவர்களின் கூற்றை எதிரிகளான கௌரவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.   ஒருபெண் எந்த வேடம் போட்டாலும் உடை அலங்காரங்களைப் பார்த்து அவர் போட்டுள்ள வேடத்தைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மனத்தில் ஒருவர் பத்தினி வேசம் போட்டால் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாது என்று வேடம் போட்டவர்கள் கருதுவார்கள். கௌரவர்கள் இதையே தங்கள் விவாதத்தின் தலைப்பாக எடுத்துக் கொண்டார்கள். சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்ததால் தான் பல்லாயிரக் கணணக்கானோர் பாரதப் போரில் மாண்டதாக வரலாறு கூறுகின்றது. வாழ்க்கை என்றால் போராட்டம்(போர்+ஆட்டும்) என்ற சிந்தனை பிற்காலச் சந்ததியினருக்கு இதிகாசங்கள் மூலம் பரிசாக அளிக்கப்பட்டது உண்மை என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் கடவுளே போர்க்களங்களில் A.K.47 க்குப் பதிலாக பல ஆயுதங்களைப் பிடிக்க வைத்துள்ளார். சிவபெருமானிடம் சூலாயுதமும் கண்ணனிடம் தடியும்; யேசுவிடம் ஒரு கோலும்; முருகனிடம் வேலும் இருந்ததாக வரலாறு சித்தரிக்கிறது. கர்ணனிடம் இருந்த நாக அஸ்திரம் இக்காலத்து ஏவுகணையை விட சக்தி வாய்ந்ததாக வர்ணிக்கப்படுகின்றது.  சூதுதனை வாது வெல்லும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பது எனது கொள்கை.  கண்ணதாசன் அவர்கள் சொல்லுவதுபோல் இந்த உலகத்தில் வெல்லுபவன் சொல்லுவதே வேதமாகிவிட்டது. ஆனால் நான் அவரைவிட்டு ஒரு படி உயர்ந்து சென்று "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே" (ஆன்மீக விடுதலை அடைந்த சான்றோர்கள்) என்ற தொல்காப்பியரின் வார்த்தைக்குள் என்னை அற்பணிக்கிறேன்.


போர் என்றதும் எனக்கு முள்ளிவாய்க்காலை விட சிறிய வயதில் நேரே பார்த்த சூரன் போரே நினைவு வருகின்றது. அப்போது சூரனை விழுத்தும் முருகனின் கதாபாத்திரமாக நான் மாறி விடுவேன். மூன்று நான்கு நாட்களுக்கு முருகன் நினைவுதான். சூரன் முருகனை விழுத்த எவளவோ மாறுவேடங்கள் எல்லாம் போட்டு வருவார். இருந்தாலும் தர்மம் முருகன் பக்கம் இருப்பதால் வேசங்களையும் வென்று மீண்டார். சின்னவீட்டு சமாச்சாரம் தெருவுக்கு வந்த போது ஆணுலகம் முருகனைச் சந்திக்கு இழுத்து மனைவிமாருக்கு நம்ம முருகனே சின்னவீடு வைத்திருப்பதாக விரிவுரை நடாத்தினார்கள். அக்காலத்தில் கி.பி 9ம் நூற்றாண்டளவில் இந்துப் பெண்களெல்லாம் போர்க்கொடி தூக்கினார்கள். முருகனை வணங்க வணங்க சின்னவீடுகள் பெருகுவதை உணர்ந்தார்கள். ஆண்வர்க்கம் அதிரடியாக பெண்கள் சமூகத்தைச் சமாளிக்க வீரசைவத்திற்குள் தனியாக பிரமச்சாரியாக இருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து "இவர் திருமணமாகவில்லை; இவரை வணங்குங்கள்" என்று இந்து சமயத்திற்குள் கொண்டு வந்தனர்.  இவர் கடவுளா என்பதில் பலருக்கு இப்பவும் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் சமயகுரவர்கள் என்று அழைக்கப்படும் நால்வரும் திட்டத்தட்ட 12 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்கள். அவற்றில் ஒரு வரிகூட பிள்ளையாரைப்பற்றி வரவில்லை. ஆனால் பிள்ளையார் பெண்களோடு இருந்த அமைப்பிலான விக்கிரகம் யப்பானில் தொல்பொருள் காட்சியகத்தில் இருக்கிறது. அதே உருவும் சிறிய அளவில் நியூயோர்க் நகரத்தில் உள்ள கிறிsதோப்பர் வீதியில் 135ம் இலக்கத்திலுள்ள ஒரு வெள்ளைக் காரனின் நகைக்கடையில் இருக்கிறது. இது கடவுள் சமாச்சாரம் விட்டு விடுவோம். நம்பிக்கையே கடவுள்! தன் நம்பிக்கையே வாழ்க்கை! பிள்ளையார் பிரசித்தி பெற்றார் தனியாக இருக்கும் அவரை உசுப்பி உசுப்பி (poke) அடியார்கள் தங்கள் வேண்டுதல்களைச் செய்தனர்.


அறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் (இவர்தான் இந்திய புகையிரதப் போக்குவரத்திற்கான நேர அட்டவணையை அமைத்துவர்) எழுதிய "வொல்காவிலிருந்து கங்கைவரை" என்ற நூலில் அந்தப்புரத்தில் அரசனால் கழிக்கப்பட்டவை அந்தணர்களுச் சின்னவீடாகியது என்றும் அந்தணர்களால் கழிக்கப்பட்ட பெண்கள் தேவதாசிகளாகித் தெருத்தெருவாக அலைந்தனர்" என்று குறிப்பிடுகிறார். என்னை முகநூலில் உசுப்புபவர்களைப்பற்றி கதை எழுத எனக்கும் ஒரு அம்பேத்கார் இப்போது தேவைப்படுகின்றார்.


Kumar Kanagasabai இவர் ஆரம்பத்தில் கமலா கனகசபை; மலேசியா என்று அறிமுகமாகி இருப்பிடம் லண்டன் என்று மாற்றி இருப்பவர். கணனியில் காதல் மொழிபேசி; கடைசியில் காசு அனுப்பமுடியுமா என்று கேட்டவர். இப்போது kumar kanagasabai என்று தன்னை ஆணாக மாற்றியுள்ளார். ஆணாக மாற்றினாலும் எழுதிய எழுத்துக்கள் அப்படியே இருக்கின்றன.  Bairavi Sri இவர் முதலில் செல்வியாக இருந்து கொஞ்சநாள் பேசாமல் விட்டுவிட்டு தன்னைத் தானே Bairavi Sri ஆகமாற்றிக் கொண்டவர்.  இவரின் மாறுவேடம் தெரிந்து நான் நண்பர் பட்டியலில் சேர்க்கவில்லை. SELVY இந்தச் செல்வி களவியலில் காமமொழி பேசி என்னை நிலைகுலையச் செய்தது. நான் யாரென்று கண்டுபிடித்ததும் "கெட்டிக்காரன்" கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று பாராட்டுப் பத்திரமும் வேறு தந்தது. அடுத்தது தமிழ் மீது பிரியம் உள்ளவர் போல் காட்டும் ஒருவருடன் இந்தப்பேய் சேர்ந்து "மாலா கிறிs" என்ற பெயரில் வந்தது. ஆசை வார்த்தைகள் கூறியது. தனது கணவன் யுத்தகாலத்தில் இறந்துவிட்டதாகவும்; தன் கணவர் என்னைப் போல்தான் இருப்பார் என்றும் காமச்சதிர் ஆடியது. என்னைப் பலவீனப்படுத்தியது. திரும்பவும் இப்போ முருங்கைமரம் ஏறிவிட்டதாக நினைக்கிறன். 


ஒருவன் தன் விதிவசத்தால் வாழ்க்கையில் பலவழிகளாலும் துன்பப்பட்டுக்கொண்டு தனிமையிலும் தியானங்களிலும் இருக்கும்போது அன்பும் ஆறுதலும் காட்டுவதற்குப் பதிலாக அவனது தனிமை வாழ்க்கைச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆசைவார்த்தைகளைக்காட்டி அவன் மனத்தைப் பேதலிக்கச் செய்து அதில் சுகம் காண விளைந்தவர்கள் எல்லாம் திருமணமான மாற்றான் தோட்டத்து மல்லிகைகள்.  பாவம் தோட்டக்காரன்! 


நடந்தது என்ன! குற்றமும் பின்னணியும்" (இது vijai TV யில் திரு கோபி நாத் அவர்களின் வார்த்தை தான்) kamala, bairavi, bairavi Sri, mala Krish, Selvi என்ற முகநூல் ID களுக்கு ஒரு பெண்தான் முதலாளி. இதைவிட தனக்கென்றும் ஐந்து ID பப்ளிக்காக வைத்திருக்கிறது. பின்னர் அந்தக் கிறுக்கி நான் எழுதிய விடையங்களில் சிலவற்றை எனது உண்மையான கள்ளங்கடபமற்ற நண்பர்களுக்கும் நண்பியர்களுக்கும் அனுப்பி என்னை மட்டம் தட்டத் தொடங்கியது. உலக அரங்கில் என்னை அசிங்கப் படுத்தத் தொடங்கியது. கடவுள் விடுவானா? ஒரு குருவை எனக்காகத் தயார் செய்தான். கடந்த 07.09.2011 அன்று எனக்குத் தரிசனம் கிடைத்தது. எதிரிகள் ஈட்டிகளைத் தயாரித்தார்கள். நான் பாதுகாப்பிற்குக் கேடையங்களை மட்டுமே தயாரித்தேன். இது குருவின் உபதேசம்!


ஓசோ சொல்கின்றார் "இந்த உலகத்தில் மகான்கள் தோன்றும்போது கூடவே சாத்தான்களும் அவரது மகிமையை இழிவுபடுத்துவதற்காகத் தோன்றிவிடுகிறார்கள். சாத்தான்கள் ஆன்மீகவாதிகள் போல் வேடமணிந்து அவரிடம் சென்று சிதைத்து விடுவார்கள். ஆன்மாக்களே விழிப்பாக இருங்கள்" என்று சொல்கிறார். "அவன் நடத்தும் நாடகத்தில் உங்கள் பகுதி முடிந்துவிட்டது" என்று கூறும் சாத்தான்களை உங்கள் பார்வையே பொசுக்கிவிடும் அளவு வல்லமை பெறுங்கள். இக்கருத்தையே சுவாமி விவேகானந்தரும் தனது "ஞானதீபம்" என்ற நூலில் 258வது பக்கத்தில்" ஆன்ம ஞானத்தில் ஒருவர் சிறந்து தோன்றினால் உடனே அவரைப்பற்றிப் பல கட்டுக்கதைகள் கட்டப்பட்டுவிடுகின்றன" என்று. எனது ஆன்மீகக் குருவால் என் உள்ளத்தில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மீகத் தீயின்முன் இந்த ஆவிகளின் ஆட்டம் இனிப் பலிக்காது. இப்போது என் மனம் வெறுமையாக இருக்கிறது. தூரத்தில் ஓர் ஒளி தெளிவாகத் தெரிகிறது.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS