RSS

ஊமை விழிகள்


எனக்கு சில நேரங்களில் சில கேள்விகள் மனதைப் போட்டு துழைக்கும். தெரியாவிட்டால் போர்த்துக்கோண்டு படுத்துவிடுவன். குளிருக்கு ஐரோப்பாவில் அதுதான் ஒரு சொர்க்கமாக எனக்கு தெரியும். ஆனால் எனது ஒரு நண்பன் இப்படிக் கூறினான். "இவரை நின்மதியாகப் படுக்கவிடக்கூடாது என்பதில் சில சத்திராதிகள் கவனமாக இருக்குமாம்.  பொருட்களை நிலத்தில் போடுவது; தொலைபேசியைச் சத்தமாகக் கதைமப்பது; கதவை அடித்துச் சாத்துவது; கூவர் பிடிப்பது; தையல் மெசினில் தைப்பது; தொலைக் காட்சியை பெரிதாகப் போடுவது; இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு படுத்தாலும் சிலர் புறுபுறுத்துக்கொண்டு இருப்பார்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு படுக்க முடியாது" எனறு சொன்னார். பாவம் அந்த நண்பர் மாடாக உழைத்து ஓடாகிப்போய் தனது நித்திரையை வீட்டிலேயே தொலைத்துவிட்டுத் திரிகிறார். இதைவிட செவிடனாகவே பிறந்திருந்தால் மற்றவர்களின் தொல்லைகளை கேட்காமல் சந்தோசமாக இருந்திருக்கலாம் என்றும் சொன்னார். 

சிறியவயதில் எங்கள் தமிழ்வாத்தியார் ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் ஒரு குருடன். அவனது பிள்ளைக்கு பால் பருக்கும்போது மூச்சுத்திணறி பிள்ளை இறந்துவிட்டது. குருடன் பால் எப்படி இருக்கும் என்று கேட்டான். பருக்கியவர் கொக்குப்போல் வெள்ளையாக இருக்கும் என்று பதில் அளித்தார். குருடன் கொக்கு எப்படி இருக்கும் என்று கேட்டான். பருக்கியவர் தனது கையை கொக்குப்போல் உருவகித்து இப்படி இருக்கும் என்று சொன்னார். குருடன் கையைத் தடவிப் பார்த்துவிட்டு இதை விழுங்கினால் பிள்ளை சாகும்தானே என்று சொன்னான். யானையின் காதைத் தடவிப் பார்த்து சுழகு போலிருக்கிறது என்று சொன்னவனும் குருடன்தான். எனக்கும் குருடன் என்று சொன்னதும் ஒரு ஞாபகம் வருகிறது. 10ம் வகுப்பு (G.C.E O/L)அரசாங்கப் பரீட்சைக்கு ஆங்கிலக் கட்டுரைக்கு "குருடன்" என்ற தலைப்பைப் பாடமாக்கிக் கொண்டு சென்றேன். பரிட்சை வினாத்தாளில் ஒரு பிச்சைக்காரனைப்பற்றிக் கட்டுரை எழுதும்படி கேட்டிருந்தார்கள். உடனே நான் " எனது பிச்சைக்காரன் ஒரு குருடன் என்று முதல் வரியை எழுதிவிட்டுப் பின்னர் குருடனைப்பற்றி பாடமாக்கிய கட்டுரையை எழுதி ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டன். குருடர்களை ஐரோப்பாவில் மிகவும் கண்ணியமாகப் பார்க்கிறார்கள். தனியாக வெளியில் செல்லும் அளவிற்கு பழக்கப்பட்ட நாய்களை அரசாங்கம் வழங்கியிருக்கிறது. சுவிசில் தாள் காசுகளில் குருடர்கள் தடவிப்பார்த்து கண்டுபிடிப்பதற்கு அடையாளம் வைத்துள்ளார்கள். டென்மார்க்கில் நடை பாதைகளில் குருடர்கள் நடப்பதற்கென்று வித்தியாசமான கற்கள் பதித்துள்ளார்கள். அதில் நடந்துசென்றால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு குருடனைத் தெருவில் கண்டால் வலியச் சென்று உங்களுக்கு நான் உதவிசெய்வது பிடிக்குமா என்று தயவாகக் கேட்டு உதவி செய்வார்கள். காரோட்டிகள் ஒரு குருடனை கார் ஓடும் பாதையில் கண்டால் ஹாண் அடிக்கக்கூடாது என்ற சட்டம் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். வலது குறைந்தவர்களுக்கு வாழ்வழிக்கும் ஐரோப்பாகவில் வாழ்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கலோ! என்னை வலதுகுறைந்தவன் என்று நினைத்துவிடாதீர்கள். 
ஊமைகளுக்கென்று பாடசாலலை; போக்குவரத்து; இலவச கல்வி; இலவச விளையாட்டுத்திட்டம்; அரச உதவிப்பணம் எல்லாம் கிடைக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு மொழியையும் உருவாக்கி வைத்துள்ளார்கள். அதாவது கைப் பாசை. நான் ஆரம்பத்தில் சுவிசுக்கு வந்தபோது கைப்பாசை பெரிதும் உதவியது. அது தான் சர்வதேச மொழி என்பதை அன்று உணர்ந்து கொண்டன்.  ஊமைப் பெண்களும் ஆண்களும் ஒரே பாடசாலைகளில் கல்வி பயில்கிறார்கன். காதலிக்கிறார்கள். திருமணம் செய்கிறார்கள். ஆனால் ஊமைகளுக்கு அரசாங்கம் ஒரு அநியாயத்தையும் செய்கிறது. அதாவது அவர்களுக்குக் குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக ஏதோ ஒருவிதத்தில் தடையையும் செய்து விடுகிறது. காரணம் இன்றி தண்டிக்கப்படுபவர்களில் இவர்களும் அடங்குகிறார்கள். இவர்களுக்கு மூக்கைச் சொறிந்தால் கோபம் வரும் என்று எனக்கு தெரியும். எங்கள் கிராமத்தில் ஊமைக்கு முன் நின்று மூக்கைச் சொறிந்து அவர்கள் துரத்திவர ஓடியும் இருக்கிறேன்.  அதைக் கணக்குப் பண்ணிப் பார்த்தால் எனது வேகத்தில் உலக சாதனை படைத்திருக்கலாம்.  உலகசாதனை 100மீட்டர் 9.8 வினாடியில் ஓடியிருக்கின்றார்கள்.  நான் பாடசாலையில் 15 வயதில் 5அடி.2 அங்குலம் (அப்போது எனது உயரம்) பாய்ந்திருக்கிறேன். இதனால் நான் மதில் பாய்ந்து விடுவேன். மற்றவர்கள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் ஐரோப்பாவில் ஊமைகளுக்குமுன் நமது மூக்கைச் சொறிந்தால் அவர்களுக்குக் கோபம் வருவதில்லை. பழக்கப்பட்டு விட்டார்களோ அல்லது பயிற்றப்பட்டுவிட்டார்களோ எனக்குத் தெரியாது. 

இன்று ஒரு ஊமையும்; ஒரு செவிடனும்; ஒரு குருடனும்தான் எனது கதையின் கதாநாயகர்கள். இந்த மூன்றுபேரும் உயிருக்குயிரான நண்பர்கள். நண்பர்கள் மாத்திரமல்ல ஒருவருக்கு ஒருவர் இயன்ற உதவிகளைச் செய்து வாழ்பவர்கள். ஒரே வீட்டில் 3 அறைகளில் தனியாக வாழ்ந்தவர்கள். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. பின்னரும் அதே வீட்டில் அவரவர் பாட்டில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். மனைவிமார் வந்த படியால் ஒருவருக்கு ஒருவர் இப்போது உதவிசெய்வதில்லை.  மிகவும் சந்தோசமாக வாழ்க்கை போகிறது. சண்டையும் வரும் சமாதானமும் வரும். "சண்டை சமாதானம் பெண்டில் அவதானம்" என்று ஒரு பழமொழியும் சொல்வார்கள். ஒரு நாள் ஒரு விபரீதம் நடந்துவிட்டது.  திட்டம் போட்டு காரியம் செய்ததுபோல் குருடனது மனைவியைச் செவிடன் கெடுத்துவிட்டான். செவிடன் கெடுத்ததை ஊமை பார்த்துவிட்டான். ஊமை குருடனது மனைவி கெடுக்கப்பட்டதைக் குருடனுக்குச் சொல்லப் போகிறான். அவன் எப்படிச் சொல்லுவான் என்பதே ஆரம்பத்தில் என் மனதைப்போட்டுத் துழைத்ததற்குக் காரணம்.  பின்னூட்டம் எழுதும் நண்பர்களே எனது குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள். நான் நின்மதியாக நித்திரை கொள்ளவேண்டும். 

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: